Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு

India COVID-19 Surge: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 4,300-ஐ தாண்டியுள்ளது. புதிய வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் அதிக பாதிப்பு உள்ள நிலையில் மத்திய அரசு ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு
நாட்டில் அதிகரிக்கும் கொரோனாImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 04 Jun 2025 18:52 PM

டெல்லி, ஜூன் 04: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தற்போதைய தகவலின்படி, நாட்டில் 4,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளா மாநிலத்தில் மட்டும் 1,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025 மே மாதம் தொடக்கம், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவிய கொரோனா தொற்று, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதில், நான்கு புதிய வகை கொரோனா வகைகள் – LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 – இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 4,000-ஐ தாண்டிய நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்கவும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

ஆக்ஸிஜன் தயார் நிலையில் வைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின் படி, மருத்துவ அவசர காலங்களில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ வசதிகளை மாநில அரசுகள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

முக்கியமான விஷயமாக வென்டிலேட்டர்கள், அதீதநிலையின் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டறிந்து, முன்கூட்டியே பிளானிங் செய்யுமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல், எதிர்பாராத சுகாதார சிக்கல்களை சமாளிக்கும் வகையில் தேசிய ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் COVID-19 நிலவரம்: 4,302 பேர் சிகிச்சையில்

இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட தகவலின்படி, 2025 ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 4,302 பேர் COVID-19 வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 3,281 பேர் பாதிக்கப்பட்டு மீண்டும் குணமடைந்துள்ளனர். புதிய தொற்றுகள் குறைந்தபோதிலும், மக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

அரசின் வழிகாட்டல்களின்படி சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல், தேவையான மருந்து பயன்படுத்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை பின்பற்றுவது பாதுகாப்பிற்குத் துணையாக அமையும். நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய, பொதுமக்கள் https://covid19dashboard.mohfw.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கொரோனா உயிரிழப்பு நிலவரம்

நாட்டில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் கவலைக்குரிய நிலையில் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், மகாராஷ்டிராவில் மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 22 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூச்சுக்குழாய் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 25 வயதான ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தார்.

'டிரம்ப் பதவி விலகனும்’ எலாம் மஸ்க் சொன்ன விஷயம்.. என்ன பிரச்னை?
'டிரம்ப் பதவி விலகனும்’ எலாம் மஸ்க் சொன்ன விஷயம்.. என்ன பிரச்னை?...
விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ..
விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.....
ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. வெளியான அறிவிப்பு
ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. வெளியான அறிவிப்பு...
குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!...
அட்டகாசமான திரைக்கதை.. கடைசி வரை ட்விஸ்ட்.. இந்த படம் தெரியுமா?
அட்டகாசமான திரைக்கதை.. கடைசி வரை ட்விஸ்ட்.. இந்த படம் தெரியுமா?...
'தனுஷ் படத்தில் வில்லி கதாபாத்திரம்’- திரிஷா கிருஷ்ணன்!
'தனுஷ் படத்தில் வில்லி கதாபாத்திரம்’- திரிஷா கிருஷ்ணன்!...
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 30 கேள்விகள்!
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 30 கேள்விகள்!...
கிரானைட் கும்பலுக்கு சிக்கல்... காணொலியில் சாட்சி சொல்லும் சகாயம்
கிரானைட் கும்பலுக்கு சிக்கல்... காணொலியில் சாட்சி சொல்லும் சகாயம்...
பெண் டெக்கி எடுத்த விபரீத முடிவு.. 21வது மாடியில் நடந்த சம்பவம்
பெண் டெக்கி எடுத்த விபரீத முடிவு.. 21வது மாடியில் நடந்த சம்பவம்...
3 வயது மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை.. குற்றவாளி என்கவுண்டர்!
3 வயது மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை.. குற்றவாளி என்கவுண்டர்!...
’கோயில் விழாக்களில் கூடுவது நாகரிகத்தின் அடையாளமல்ல ’
’கோயில் விழாக்களில் கூடுவது நாகரிகத்தின் அடையாளமல்ல ’...