மதுபானத்துக்காக மகனை அடித்து கொன்ற தந்தை.. புனேவில் அதிர்ச்சி சம்பவம்!
Pune Father Kills Son Over Liquor | உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் மந்துபானத்துக்கு அடிமையாகி பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புனேவை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் மதுபானத்துக்காக தனது சொந்த மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே, ஜூன் 04 : புனேவில் தான் வாங்கி வந்த மதுபானத்தை மகன் குடித்ததால், ஆத்திரமடைந்த தந்தை தனது மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தையை கைது செய்த போலீசார் அவரிடம் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுவுக்காக தந்தையே மகனை கொலை செய்த சம்பசம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதுவுக்காக மகனையே கொலை செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்
மராட்டியத்தின் அமராவதி நகரில் வசித்து வருபவர் ஹீராமன் துர்வே (வயது 65). அவர் குடிப்பதற்காக மதுபானம் வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார். அந்த மதுபானத்தை அவரது மகன் திலீப் துர்வே (வயது 35) எடுத்து குடித்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்த மதுபானம் தேடிய ஹீராமன் துர்வேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தனது மதுபானத்தை எடுத்து குடித்தது தனது மகன் திலீப் என்பது தெரிய வந்ததும், கடும் ஆத்திரமடைந்த துர்வே அது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காத துர்வே மர கட்டையை எடுத்து தனது மகன் திலீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த திலீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவியின் புகாரின் அடிப்படையில் மாமனாரை கைது செய்த போலீசார்
தனது கணவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த திலீப்பின் மனைவி அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், திலீப்பை கொலை செய்த அவரது தந்தையை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
35 வயதான திலீப் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி சுற்றித் திர்ந்த நிலையில், அவரால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.