இளம் பெண்ணை கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்த கணவனின் குடும்பம்.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!
Haryana Young Woman Murder | ஹரியானாவின் 2 மாதங்களுக்கு முன்பு காணமால் போனதாக புகார் அளிக்கப்பட்ட இளம் பெண்ணின் உடலை அவரது கணவரின் வீட்டின் முன்பு இருந்த 8 அடி பள்ளத்தில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். பெண்ணின் மாமனார் அளித்த தகவலின் படி இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

ஹரியானா, ஜூன் 22 : ஹரியானாவில் (Hariyana) 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணை, அவரது கணவரின் குடும்பத்தினர் கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்த சம்பவம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்ணின் மாமனார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வீட்டின் முன்பு புதைக்கப்பட்டு இருந்த உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணின் சடலம் அவரது வீட்டு வாசலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனதாக 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்
உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டம், கோர கிராமத்தை சேர்ந்தவர் இளம் பெண் டானு ராஜ்புத். 25 வயதாகும் இவருக்கு ஹரியானாவின் ஃபரிதாபத்தை சேர்ந்த அருண் சிங் என்ற 28 வயது இளைஞர் உடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் டானுவை காணவில்லை என ஏப்ரல் 25, 2025 அன்று அவரது கணவர் அருண் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் டானு மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவர் தனது காதலுடன் ஓடிப்போய் இருக்கலாம் எனவும் போலீசார் இடம் டானுன் கணவர் அருண் சிங் கூறியுள்ளார்.
கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்து வைத்த குடும்பத்தினர்
போலீசாரிடம் டானுவின் கணவர் கூறிய குற்றச்சாட்டுகளை நம்ப மறுத்து அவரது பெற்றோர், இந்த விவகாரத்தில் ஏதோ சிக்கல் இருப்பதாக காவல்துறையிடம் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு மாதங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், ஜூன் 28, 2025 அன்று டானுவின் மாமனாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது டானுவை குடும்பமாக கொலை செய்தது குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கொல்லப்பட்ட டானுவின் உடலை கழிவுநீர் உறிஞ்சுவதற்காக ஜேசிபி மூலம் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்ட, வீட்டின் முன்பு இருந்த ஆழமான குழியில் நள்ளிரவு நேரத்தில் புதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
அவர் கூறிய தகவல்கள் அடிப்படையில் வீட்டில் முன்புறத்தில் எட்டு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட டானுவின் உடல், போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அடிப்படையில் டானு எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது விரைவில் தெரிய வரும். இருப்பினும் கணவரின் வீட்டார் டானுவை எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து எதுவும் தகவல் தெரியாத நிலையில், போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்