AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை!”… மீட்கப்பட்ட சோழர் காலப் பொக்கிஷம்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

PM Modi Mann Ki Baat: ஜூன் 21 அன்று வரவிருக்கும் 'சர்வதேச யோகா தினத்தை' (International Yoga Day) முன்னிட்டுப் பேசிய பிரதமர் மோடி, ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மன அமைதிக்கும், ஆன்மீக நல்வாழ்விற்கும் வழிவகுக்கும் உன்னதக் கலை என்றார்.

“ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை!”… மீட்கப்பட்ட சோழர் காலப் பொக்கிஷம்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!
கோப்பு புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 May 2026 11:49 AM IST

Mann Ki Baat 134th Episode: பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) உரையின் 134வது அத்தியாயம் மூலம் இன்று (மே 31, 2026) உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்களிடையே உரையாற்றினார். இந்த உரையில், சர்வதேச அளவில் இந்திய விளையாட்டு வீரர்கள் படைத்து வரும் சாதனைகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது உரையில், இந்திய தடகளம் மற்றும் விளையாட்டு வீரர்களின் அசாத்தியமான திறமைகளையும், அவர்களின் சிறப்பான செயல்பாடுகளையும் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் புதிய சாதனைகளைப் படைத்து, நாட்டிற்குப் பெருமை தேடித் தந்துள்ளதாகக் குறிப்பிட்டு அவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய வெண்கலச் சிலை ஒன்று மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டதை மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சோழர் காலப் பொக்கிஷம்:

“நமது கலாச்சாரப் பாரம்பரியங்களின் அடையாளமாக விளங்கும் அரிய கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டபோது, அவை வெறும் சிலைகளாக மட்டும் போகவில்லை; நமது ஆன்மாவும், வரலாறும் சேர்ந்தே திருடப்பட்டன. ஆனால், தற்போதைய நமது அரசின் தொடர் ராஜதந்திர முயற்சிகள் காரணமாக, திருடப்பட்ட நமது தொன்மையான கலைப்பொருட்கள் ஒவ்வொன்றாகத் தாய்நாட்டிற்குத் திரும்பி வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

மேலும், “தமிழ்நாட்டின் சோழப் பேரரசு என்பது கலை மற்றும் கட்டிடக்கலைக்கு உலகப் புகழ்பெற்றது. அப்படிப்பட்ட சோழர் காலத்து ‘கல்யாணசுந்தரர்’ சிலை மீண்டும் இந்தியா திரும்பியிருப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறிப்பாகத் தமிழக மக்களுக்கும் ஒரு மாபெரும் பெருமித தருணமாகும்” என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

சர்வதேச யோகா தினம் மற்றும் ஆரோக்கியம்:

ஜூன் 21 அன்று வரவிருக்கும் ‘சர்வதேச யோகா தினத்தை’ (International Yoga Day) முன்னிட்டுப் பேசிய பிரதமர் மோடி, ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மன அமைதிக்கும், ஆன்மீக நல்வாழ்விற்கும் வழிவகுக்கும் உன்னதக் கலை என்றார். உலக நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவின் யோகா கலையை ஏற்றுக்கொண்டு போற்றி வருவதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம்:

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், சுயசார்பு இந்தியாவின் (Atmanirbhar Bharat) இலக்கை அடைவதிலும் கிராமப்புற மற்றும் உள்ளூர் கைவினைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். பொதுமக்கள் அனைவரும் பண்டிகைகள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு உள்ளூர் தயாரிப்புகளையே (Local Products) வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும், அது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உலக நாடுகளும் – இந்தியாவின் பங்கும்:

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு சர்வதேச சவால்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். பசி, காலநிலை மாற்றம் போன்ற உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு கூட்டு முயற்சியின் மூலமே தீர்வு காண முடியும் என்றும், அதில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்றும் விவரித்தார்.

இளம் தலைமுறைக்கு அழைப்பு:

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல் மிக அவசியமானது எனக் குறிப்பிட்ட பிரதமர், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் இளைஞர்கள் தங்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். இந்தியாவின் கலாச்சாரம், விளையாட்டுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் அடிமட்ட அளவிலான சாதனையாளர்களின் கதைகளை உலகிற்குத் தொடர்ந்து கொண்டு சேர்ப்பதில் ‘மன் கி பாத்’ தளம் எப்போதும் ஒரு பாலமாகச் செயல்படும் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

Follow Us