உடல்நலக்குறைவால் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் இருக்கும் சர் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி (Congress Party Former Leader Sonia Gandhi) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூன் 15 2025 தேதியான நேற்று அவரது உடல்நிலை மோசமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி:
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi has been admitted to Sir Ganga Ram Hospital in Delhi. She has been admitted to the gastro department due to stomach-related problem and is under observation: Sir Ganga Ram Hospital pic.twitter.com/LT40WAYD1L
— ANI (@ANI) June 15, 2025
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக இரைப்பை குடல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் அவரது உடல் நிலையை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பு வரவில்லை. முன்னதாக ஜூன் 7 2025 ஆம் தேதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தியை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும் அவருக்கு ரத்த அழுத்தம் இயல்வைவிட சற்று அதிகமாக இருப்பதாகவும் அங்கு இருக்கக்கூடிய மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தாளும் சீராக இருப்பதன் காரணத்தாலும் அவர் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வீடு திரும்பினார்.
சோனியா காந்தி சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் எதிர்கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வயிறு தொடர்பான பிரச்சனைக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிப்ரவரி மாதம் 2025 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் குறிப்பிடத்தக்க பகுதியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. அமெரிக்கா சென்ற சோனியா காந்தியுடன் அவரது மகனும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உடன் பயணம் மேற்கொண்டார்.