மணமகனின் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..
Bihar: திருமண நிகழ்வின் போது மணமகனின் கைகள் நடுங்கியதால் கடைசி நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட பணத்தை பெண் வீட்டார் திருப்பி கேட்ட போது அது செலவாகிவிட்டதாக மணமகன் வீட்டார் கூறியுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியின் போது மணமகனுக்கு கை நடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் மிக முக்கியமான சடங்கான சிந்தூர் தானம் எனப்படும் நிகழ்வின் பொழுது மணமகனின் கை நடுங்கத் தொடங்கியதை கண்டு மணமகள் கோபமடைந்து திருமணம் செய்ய மறுத்துவிட்டார். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணமகன், மணமகளின் வீட்டிற்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து திருமண ஊர்வலத்துடன் வந்துள்ளார். பின்னர் அனைத்து சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டது.
திருமனத்தை நிறுத்திய மணமகள்:
वो पागल है, मैं शादी नहीं करूंगी: शादी के सिंदूर दान की रस्स के दौरान दूल्हा का हाथ हिल गया और इसके बाद लड़की ने शादी से इनकार कर दिया. लड़की ने कहा कि लड़का पागल है.#kaimur #Bihar #BiharNews pic.twitter.com/rCtE68R2VI
— FirstBiharJharkhand (@firstbiharnews) June 9, 2025
அனைத்து சடங்குகளும் நன்றாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் திருமணத்தின் மிக முக்கிய நிகழ்வான சிந்தூர் தானத்தின் பொழுது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் இட வந்த பொழுது அந்த மணமகனின் கை நடுங்கியுள்ளது. இதனை கண்ட மணமகள், மணமகன் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலம் பப்புவ காவல் நிலைய பகுதி எல்லைக்குள் நடந்துள்ளது. மணமகன் அனைத்து சடங்குகளும் முடிவடைந்த பின் மணமகள் திடீரென இந்த திருமணத்தை நிறுத்தியதை தொடர்ந்து, இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் இரு குடும்பத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகும் மணமகளின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது மேலும் மணமகளின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அப்பொழுது மணமகனின் தந்தை திருமணத்தை நடத்த ஒரு லட்சத்து செலவிட ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும், ” அதில் 90 ஆயிரம் ரொக்கமாக கிடைத்தது. நகைகளுக்கு 30,000 ரூபாய், புடவைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய், இசை நிகழ்ச்சிக்கு பத்தாயிரமும், மீதமுள்ள பணம் போக்குவரத்து செலவிற்கும் செலவிட்டதாக” குறிப்பிட்டார். மேலும் மணமகனின் உறவினர் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில் அனைத்து சடங்குகளும் முடிவடைந்த நிலையில் சிந்தூர் அணிவிக்கும் நேரத்தில் மணமகனின் கை நடுங்கியது பதட்டத்தின் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்