Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த வீடியோ வைரல் – காலில் விழுந்து மன்னிப்புக்கேட்ட பெண்

Woman Assaults Auto Driver :கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பெயரில் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெண் ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த வீடியோ வைரல் – காலில் விழுந்து மன்னிப்புக்கேட்ட பெண்
ஆட்டோ ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்ட பெண்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 02 Jun 2025 18:54 PM

கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூருவில் (Bengaluru) பெல்லந்தூர் பகுதியில் கடந்த மே 31, 2025 சனிக்கிழமை பீகாரை சேர்ந்த 28 வயது மென்பொருள் பொறியாளர் பங்குரி மிஷ்ரா என்பவர் ஒரு ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் சமூக ஊடகங்களில் (Social Media) பரவலாக பரவியது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  கடந்த மே 31, 2025 அன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பெல்லந்தூர் சென்ட்ரோ மால் அருகே நடைபெற்றது. பங்குரி மிஷ்ரா மற்றும் அவரது கணவர் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது பைக்கும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் பங்குரி மிஷ்ரா ஆட்டோ டிரைவர் லோகேஷை செருப்பால் அடித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஆட்டோ டிரைவரை அடித்த பெண் மீது போலீசில் புகார்

வீடியோவில், பங்குரி மிஷ்ரா ஆட்டோ டிரைவரை செருப்பால் அடிக்கிறார், மேலும்  ஆட்டோ டிரைவரைப் பார்த்து”வீடியோ எடுக்கிறீயா எடு என ஆக்ரோஷமாக கூறுகிறார். மற்றொரு பக்கம் அவரது கணவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து அவரது கணவர் இந்த சம்பவத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் ஆட்டோ  ஓட்டுநர் லோகேஷ், இந்த விவாதம் ஹிந்தியில் நடந்ததால், அதை பதிவு செய்ததாக கூறினார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ், பெல்லந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பங்குரி மிஷ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தனர், பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

வைரலாகும் வீடியோ

 

ஆட்டோ ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்ட ஐடி ஊழியர்

இந்த வீடியோ வைரலான நிலையில் பெண் மீது ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்குரி மிஷ்ரா தனது கணவருடன் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்கு சென்று காலில் விழுந்து மனிப்பு கேட்டுள்ளா். மேலும் தான் கர்ப்பிணி என்பதால் பயத்தில் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

 

சம்பவத்திற்குப் பிறகு, பங்குரி மிஷ்ரா மற்றும் அவரது கணவர் இணைந்து லோகேஷிடம் மன்னிப்பு கேட்டு, அவரது கால்களில் விழுந்தனர். பங்குரி, தான் கர்ப்பிணி என்பதால் பயந்ததாகவும், பெங்களூருவையும் அதன் மக்களையும் நேசிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.  இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பரவியது, பலரும் பங்குரி மிஷ்ராவின் நடவடிக்கையை கண்டித்தனர். சிலர், கர்ப்பிணி என்பதனால் பயந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. ஆட்டோ ஓட்டுநரிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது தவறு எனவும் கருத்து தெரிவித்தனர்.  இந்த சம்பவம், பொது இடங்களில் நடக்கும் வன்முறைகள் சமூக ஊடகங்களின் வருகைக்கு பிறகு எவ்வாறு மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. 

கேங்க்ஸ்டர் கதை.. 2 மணி நேரம் விறுவிறுப்பு.. இந்த படம் பாருங்க!
கேங்க்ஸ்டர் கதை.. 2 மணி நேரம் விறுவிறுப்பு.. இந்த படம் பாருங்க!...
’பிரியாணி வேணும்' சிறுவனுக்கு சப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!
’பிரியாணி வேணும்' சிறுவனுக்கு சப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!...
மதுபானத்துக்காக மகனை அடித்து கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்!
மதுபானத்துக்காக மகனை அடித்து கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்!...
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொடிய பூஞ்சையை கடத்திய பெண் கைது
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொடிய பூஞ்சையை கடத்திய பெண் கைது...
தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்!
தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்!...
செம லக்.. அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன்.. பணமழை பொழியும் ராசிகள்!
செம லக்.. அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன்.. பணமழை பொழியும் ராசிகள்!...
விபத்துகளை தடுக்க புதிய வழி.. பேருந்துகளில் வரும் அதிநவீன கருவி!
விபத்துகளை தடுக்க புதிய வழி.. பேருந்துகளில் வரும் அதிநவீன கருவி!...
சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்...
சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்......
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது - அமைச்சர் பதில்
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது - அமைச்சர் பதில்...
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்...