Ahmedabad Plane Crash: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து..! 242 பயணிகளின் நிலைமை என்ன..?
Air India Plane Crashes At Ahmedabad Airport: அகமதாபாத்தின் மெகானி பகுதியில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளான இடம் ஒரு குடியிருப்பு பகுதி என்று நம்பப்படுகிறது. இந்த விமானம் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் என்றும், விமானத்தில் மொத்தமாக 133 பயணிகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அகமதாபாத், ஜூன் 12: அகமதாபாத்தின் மெகானி பகுதியில் ஏர் இந்தியா விமானம் (Ahmedabad Plane Crash) விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளான இடம் ஒரு குடியிருப்பு பகுதி என்று நம்பப்படுகிறது. இந்த விமானம் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (Air India Plane) என்றும், விமானத்தில் மொத்தமாக 242 பயணிகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அகமதாபாத் விமான நிலையத்தில் (Ahmedabad Airport) சுற்றுச்சுவரில் விமானம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. NDTV அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் இன்று அதாவது 2025 ஜூன் 12ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடந்தது என்று தெரிவித்துள்ளது.
விமானத்தின் வகை என்ன..?
An Air India plane with 242 passengers onboard has crashed in Gujarat’s Ahmedabad, confirms the State Police Control Room
More details awaited pic.twitter.com/RPAYU8KfUM
— ANI (@ANI) June 12, 2025
விமானத்தின் வகை குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை. இருப்பினும் கிடைத்த தகவலின்படி, இது ஒரு ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகும். போயிங் ட்ரீம்லைனர் 787 விமானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த விமானமானது சுமார் 300 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் என்பதால், பயணத்திற்கு தேவையான நிறைய எரிபொருள் இருந்துள்ளது. இந்த விமான விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை உடனடி சிகிச்சைக்காக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




தற்போது வெளியாகி வரும் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் என்னவென்றால், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விமானத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்கு தற்போது விரைந்துள்ளன.
ஏர் இந்தியா விளக்கம்:
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today, 12 June 2025. At this moment, we are ascertaining the details and will share further updates at the earliest on https://t.co/Fnw0ywg2Zt and on our X handle (https://t.co/Id1XFe9SfL).
-Air India…
— Air India (@airindia) June 12, 2025
மேகனிநகரில் விபத்துக்குள்ளான விமானத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் “அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமானத்தை இயக்கும் AI171 விமானம் இன்று அதாவது ஜூன் 12, 2025 அன்று ஒரு விபத்தில் சிக்கியது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிசெய்து வருகிறோம், மேலும் கூடுதல் புதுப்பிப்புகளை http://airindia.com மற்றும் எங்கள் X பக்கத்தில் விரைவில் பகிர்ந்து கொள்வோம்,” என்று தெரிவித்தது.
(தற்போது வந்த தகவலை வைத்து முதற்கட்ட செய்தி கொடுக்கப்பட்டுள்ளது . மேலதிக தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன)