Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்து.. சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம் மீட்பு!

Ahmedabad Air India Flight Crash | அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் சுமார் 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.80,000 பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அந்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்து.. சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம் மீட்பு!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 18 Jun 2025 10:17 AM

அகமதாபாத், ஜூன் 18 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் (Ahmedabad Air India Flight Accident) போது சுமார் 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.80,000 பணம் மீட்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பயணிகளின் உடமைகள் சிதறி கிடந்ததாகவும், அவற்றை மீட்கும் பணியில் இந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான விபத்து சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட பொருட்கள் என்ன என்ன, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தரை முழுவதும் சிதறி கிடந்த பயணிகளின் உடைமைகள்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, ஏர் இந்தியா விமான விபத்தின் போது, விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்தவுடன் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவிக்காக சென்றுள்ளனர். அதில் முதலில் வந்தது 56 வயது ராஜு படேல் என்பவர் தான். அவர் தனது 5 பேர் கொண்ட குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். விமானம் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், முதல் 15 முதல் 20 நிமிடங்களுக்கு அவர்களால் அருகே நெருங்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். அப்போது மீட்பு படை சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தானும் தனது குழுவும் உதவி செய்ய தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து – சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம் மீட்பு

விமான விபத்து மீட்பு பணியின் போது பயணிகளின் உடைமைகள் சிதறி கிடந்ததாகவும், அதனை மீட்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது, விமான விபத்து நடைபெற்ற அந்த பகுதியில் இருந்து 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.80,000 பணம் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மீட்கப்பட்ட இந்த பணம் மற்றும் தங்கம் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று குஜராத் அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி.. பறிபோன உயிர்
வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி.. பறிபோன உயிர்...
விக்ரம் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் - ராகவா லாரன்ஸ்
விக்ரம் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் - ராகவா லாரன்ஸ்...
இங்கிலாந்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? தொடர் வெற்றியை பெறுமா?
இங்கிலாந்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? தொடர் வெற்றியை பெறுமா?...
பெட்ரோல் பங்க்கில் நடைபெறும் 'ஜம்ப் டிரிக்' மோசடி பற்றி தெரியுமா?
பெட்ரோல் பங்க்கில் நடைபெறும் 'ஜம்ப் டிரிக்' மோசடி பற்றி தெரியுமா?...
நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா? நடந்தது என்ன?
நடிகர் ஆர்யா வீட்டில் சோதனையா? நடந்தது என்ன?...
அமைச்சர் பி.டி.ஆர்-ன் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன?
அமைச்சர் பி.டி.ஆர்-ன் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன?...
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி...
திண்டுக்கல்: தாய் எடுத்த முடிவால் பறிபோன 4 உயிர்கள்..நடந்தது என்ன
திண்டுக்கல்: தாய் எடுத்த முடிவால் பறிபோன 4 உயிர்கள்..நடந்தது என்ன...
அனுபமா பரமேசுவரனுக்கு நடந்த அதே பிரச்னை சிம்ரனுக்கும் நடந்தது...
அனுபமா பரமேசுவரனுக்கு நடந்த அதே பிரச்னை சிம்ரனுக்கும் நடந்தது......
ரேஷன் கார்டில் e KYC செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
ரேஷன் கார்டில் e KYC செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!...
மழைக்கால கட்டுக்கதை...ஆரோக்கியமாக இருக்க நிபுணர்கள் சொல்வது என்ன?
மழைக்கால கட்டுக்கதை...ஆரோக்கியமாக இருக்க நிபுணர்கள் சொல்வது என்ன?...