Air India Crash : ஏர் இந்தியா விமான விபத்து.. சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம் மீட்பு!
Ahmedabad Air India Flight Crash | அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் சுமார் 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.80,000 பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அந்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத், ஜூன் 18 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின் (Ahmedabad Air India Flight Accident) போது சுமார் 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.80,000 பணம் மீட்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பயணிகளின் உடமைகள் சிதறி கிடந்ததாகவும், அவற்றை மீட்கும் பணியில் இந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இந்த நிலையில், விமான விபத்து சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட பொருட்கள் என்ன என்ன, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தரை முழுவதும் சிதறி கிடந்த பயணிகளின் உடைமைகள்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, ஏர் இந்தியா விமான விபத்தின் போது, விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்தவுடன் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவிக்காக சென்றுள்ளனர். அதில் முதலில் வந்தது 56 வயது ராஜு படேல் என்பவர் தான். அவர் தனது 5 பேர் கொண்ட குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். விமானம் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், முதல் 15 முதல் 20 நிமிடங்களுக்கு அவர்களால் அருகே நெருங்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். அப்போது மீட்பு படை சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தானும் தனது குழுவும் உதவி செய்ய தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்து – சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம் மீட்பு
Ahmedabad Air India Plane Crash : Around 70+ Tolas ( 700-800 Grams) of Gold Jewellery Retrieved, ₹80,000 Cash, Passports, and A Bhagwad Geeta. pic.twitter.com/eins5eNxp8
— Kisna.ramilaben 🐦 (@Kisna179) June 17, 2025
விமான விபத்து மீட்பு பணியின் போது பயணிகளின் உடைமைகள் சிதறி கிடந்ததாகவும், அதனை மீட்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது, விமான விபத்து நடைபெற்ற அந்த பகுதியில் இருந்து 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.80,000 பணம் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மீட்கப்பட்ட இந்த பணம் மற்றும் தங்கம் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று குஜராத் அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.