Air India : 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.. மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தகவல்!
83 Air India Flights Cancelled in Six Days | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று (ஜூன் 17, 2025) ஏர் இந்தியாவுடன் நடைபெற்ற கூட்டத்தில் வெறும் 6 நாட்களில் மட்டும் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.

புதுடெல்லி, ஜூன் 18 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை (Ahmedabad Air India Flight Accident) தொடர்ந்து ஜூன் 12, 2025 முதல் ஜூன் 17, 2025 வரையிலான 5 நாட்களில் மட்டும் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA – Directorate General of Civil Aviation) தெரிவித்துள்ளது. இந்த 83 விமானங்களில் 66 விமானங்கள் போயிங் 787 (Boeing 787) ரக விமானங்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அகமதாபாத்தில் புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூன் 12, 2025 அன்று மதியம் ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் புறப்பட்டு சென்றது. விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே விமானம் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடு மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்து சம்பவம் உலகை உலுக்கிய, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா (Air India) மற்றும் ஏர் எக்ஸ்ப்ரஸ் (Air Express) விமான நிறுவன மூத்த அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று (ஜூன் 17, 2025) உயர்மட்ட கூட்டம் ஒன்று நடத்தியது.
6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து – மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்
83 Air India wide-body flights cancelled between June 12 to 17: DGCA
Read @ANI Story | https://t.co/mcM99MYJJP#AirIndiaFlights #DGCA #Flightcancel pic.twitter.com/gd2zyqxuJD
— ANI Digital (@ani_digital) June 17, 2025
பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் பயணிகள் சேவைக்கான ஒழுங்குமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த சமீபத்திய செயல் தரவுகளை இயக்குனராகம் மறு ஆய்வு செய்தது. இந்த மறு ஆய்வின் போது, போயிங் 787 விமானத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக மத்திய போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 12, 2021 முதல் ஜூன் 17, 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ரத்து செய்யப்பட்ட இந்த 83 விமானங்களில் மொத்தம் 66 விமானங்கள் போ எந்த 787 ராக விமானங்கள் ஆகும் என்றும் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.