AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

80வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!!

80th Independence Day 2026: இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகத் தொடங்கியது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் முதன்முறையாக தேசியப் பாடல் அதிகாரப்பூர்வமாகப் பாடப்பட்டது. 25,000 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் AI கண்காணிப்பு கேமராக்கள் சூழ பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.

80வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Aug 2026 08:09 AM IST

டெல்லி, ஆகஸ்ட் 15: இந்திய திருநாடு தனது 80-வது சுதந்திர தினப் பெருவிழாவை இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். ‘விகசித் பாரத் 2047’ (வளர்ச்சியடைந்த இந்தியா 2047) எனும் தொலைநோக்கு இலக்கை முன்வைத்து நடைபெறும் இந்த விழாவில், இந்தியாவின் இளைஞர் சக்தியான ‘யுவ சக்தி’யின் பங்களிப்பு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த ஆண்டின் தேசிய விழா கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு சிறப்பு மரபு:

இந்த 80-வது சுதந்திர தின விழாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றமாக, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ செங்கோட்டை கொத்தளத்தில் முறைப்படி பாடப்படுகிறது. செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றதைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் பார்வையிட்டார். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மி.மீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவியதைத் தொடர்ந்து, சுமார் 2,500 என்.சி.சி கடேட்டுகள் மற்றும் ‘மை பாரத்’ அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதத்தைப் பாடி விழாவைச் சிறப்பித்தனர்.

AI கண்காணிப்புடன் பலத்த பாதுகாப்பு

தலைநகர் டெல்லி மற்றும் செங்கோட்டைப் பகுதி முழுவதிலும் அடுக்கடுக்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 25,000-க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை வளாகத்தைச் சுற்றி 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வீடியோ அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்கள் பாதுகாப்புப் பணியில் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Follow Us