எஸ்.ஜே.சூர்யா உடன் கூட்டணி அமைக்கும் ரவி மோகன்… யார் படத்தில் தெரியுமா?
Ravi Mohan: சமீப காலமாக நடிகர் ரவி மோகன் தனது படம் தொடர்பான செய்திகளில் அதிகம் இடம் பிடித்ததை விட தனது சொந்த வாழ்க்கை தொடர்பாகவே அதிகமா செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ரவி மோகனின் படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தனர். இந்தப் படம் ஜனவரி மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. வித்யாசமான கதைக் களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து கராத்தே பாபு, ஜீனி மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் கராத்தே பாபு, ஜீனி படங்களில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவித்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா உடன் கூட்டணி வைக்கும் ரவி மோகன்:
நடிகர் ரவி மோகன் தற்போது தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததா இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக சந்தானத்தின் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாகி ஆகிய படங்களை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை புரமோத் பிலிம்ஸ் படம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தின் பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்தப் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
அதன்படி இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தற்போது தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது. வில்லன் கதாப்பாத்திரம் என்றாலே நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று திரையுலகில் கூறும் அளவிற்கு மிரட்டி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.