96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அப்டேட்டை கொடுத்த இயக்குநர் பிரேம் குமார்
96 Movie Part 2 Update: நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாகவும் நடித்து சூப்பர் ஹிட் அடித்தப் படம் 96. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கேமரானா மேனாக அறிமுகம் ஆகி பின்பு இயக்குநராக கொடிக்கட்டி பறப்பவர் பிரேம் குமார் (Director Prem Kumar). இவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) மற்றும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனை வைத்து இயக்கிய படம் 96. இந்தப் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று தென்னிந்திய மொழி சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநராக மாறினார் பிரேம் குமார். முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அவ்வப்போது பட விழாக்களில் இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் பாகம் இரண்டு நிச்சயமாக வரும் என்று தெரிவித்து வந்தார்.
96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சூப்பர் அப்டேட்:
இந்த நிலையில் இயக்குநர் பிரேம் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் 96 படத்தின் தொடர்ச்சி குறித்து பேசிய அவர் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இரண்டாம் பாகத்தில் கதையை எப்படி நகர்த்தி செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.




முன்னதாக முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்றும் அவர்களுக்கு பதில் வேறு நடிகர்களிடையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் 96 படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் தான் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்கள் என்று பிரேம் குமார் உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் தொடங்கிய காதல் கைகூடாமல் போக அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை மையமாக வைத்து முதல் பாகம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இயக்குநர் பிரேம் குமாரின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இயக்குநர் பிரேம் குமாரின் இறுதிப் படம்:
96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் நாயகன்களாக நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீ திவ்யா, பிரயதர்ஷினி, ராஜ்கிரண், சரண், கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.