Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பறந்து போ படம் யாருக்கானது… இயக்குநர் ராம் பேட்டி!

Director Ram: இயக்குநர் ராம் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பறந்து போ. இந்தப் படத்தின் பிரீமியர் காட்சி இன்று கோவையில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த இயக்குநர் ராம் இந்தப் படம் யாருக்கான படம் என்று தெரிவித்துள்ளார்.

பறந்து போ படம் யாருக்கானது… இயக்குநர் ராம் பேட்டி!
இயக்குநர் ராம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2025 18:55 PM

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் போன்ற ஒரு உலகமயமாக்களை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர் இயக்குநர் ராம் (Director Ram). மனித உணர்வுகளையும் அதற்குள் இருக்கும் சிக்கல்களையும் அழகாக காட்டுவதால் இவருக்கு என தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து இயக்குநர் ராம் எடுத்துள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்துள்ள நிலையில் பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரெய்லர் என தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பறந்து போ படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக சென்னையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்ள் வெளியிடப்பட்ட நிலையில் படத்தைப் பார்த்தவர்கள் வெகுவாகக் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து தற்போது கோவையில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

பறந்து போ படம் பெற்றோர்களுக்கானது:

கோவையில் பறந்து போ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலுக்கு பிறகு இயக்குநர் ராம் உட்பட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய இயக்குநர் ராம் அனைவரும் சிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பறந்து போ படத்தை எடுத்தேன். அதே மாதிரி படத்தின் பல காட்சிகளில் சிரிப்பு சத்தம் கேட்டது.

மேலும் இந்த பறந்து போ படம் தனது குழந்தைகளுக்காக அனைத்தையும் விட்டுகொடுத்து வாழும் பெற்றோர்களுக்கானது. பல குழந்தைகளிடம் பேசும் போது அப்பாக்கள் தான் அதிகமாக பொய் சொல்வதாகவும் அம்மாக்கள் பொய் சொல்வது இல்லை என்றும் கூறுகிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் ஒரு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாடலாசிரியர் நா. முத்துகுமார் குறித்து பேசிய இயக்குநர் ராம், அவரை நாங்கள் அனைவரும் மிஸ் செய்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், வருகின்ற ஜூலை மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு முத்துகுமாரின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக ஒரு விழா நடத்துகிறோம். அது முத்துகுமாரின் புகழை தமிழகம் எங்கும் கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.

பறந்து போ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: