Jiiva : மலையாள இயக்குநருடன் இணையும் ஜீவா.. புதிய படத்தின் அப்டேட் இதோ!
Jiiva 45 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான இவர் சினிமாவில் முன்னணி நாயகனாகத் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஜீவாவின் 45வது படத்தின் ஏற்கனவே ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், இப்படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஆர்.பி சவுத்ரி (R.P. Chowdhury). அவரின் மகன் நடிகர் ஜீவா (Jiiva) கடந்த 2003ம் ஆண்டு வெளியான, ஆசை ஆசையாய் (Aasai Aasaiyai) என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை அவரின் தந்தை ஆர்பி சவுத்ரிதான் தயாரித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் கோ (Ko), நீதானே என் பொன் வசந்தம் (Neethane en ponvasantham) மற்றும் கற்றது தமிழ் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததன. இந்த படங்களைத் தொடர்ந்து தற்போதுவரை படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார்.
இவரின் நடிப்பில் இறுதியாக அகத்தியா (Agathiyaa) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநரும், பாடலாசிரியருமான பா. விஜய் (Pa. Vijay) இயக்கியிருந்தார். இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது ஜீவா, மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் (Nitish Sahadev) இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். ஜீவா45 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.




அது என்னவென்றால், இப்படமானது முற்றிலும் குடும்ப கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். இதில் தம்பி ராமையா மற்றும் விடிவி கணேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைப் பற்றி தினத்தந்தி செய்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீவா வெளியிட்ட ஜீவா45 பட ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் :
View this post on Instagram
ஜீவாவின் 45வது திரைப்படம் :
ஜீவாவின் அறிமுகமான ஆசை ஆசையாய் திரைப்படம் வெளியாகி 22 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இவரின் முன்னணி நடிப்பில் தற்போது அவரின் 45வது திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் ஃபேலிமி என்ற திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.
அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜீவாவின் 45வது படத்தின் மூலம் தமிழுலும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தைத் தயாரிப்பாளர் கண்ணா ரவி தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய ரோலில் விடிவி கணேஷ், தம்பி ராமையா போன்றவர்கள் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட குடும்ப கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம்.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் நெகிழ்ச்சி :
இன்ஸ்டாகிராமில் பதிவை வெளியிட்ட இயக்குநர் நிதி சகாதேவ், “இது எனது முதல் தமிழ் திரைப்படம், அது எனது பெரிய கனவு. இந்த புதிய படத்தில் ஜீவா மற்றும் திறமையான மற்ற நடிகர்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மேலும் இப்படமானது வித்தியாசமான படமாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்