Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயுடன் ஜன நாயகன் படத்தில் நடிப்பது நெகிழ்ச்சியாக உள்ளது – நடிகை பூஜா ஹெக்டே

Actress Pooja Hegde: நடிகை விஜயின் 69-வது படமாக உருவாகி வருகின்றது ஜன நாயகன் படம். இந்தப் படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே விஜயுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். முன்னதாக இவர்கள் இருவரும் பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயுடன் ஜன நாயகன் படத்தில் நடிப்பது நெகிழ்ச்சியாக உள்ளது – நடிகை பூஜா ஹெக்டே
விஜயுடன் நடிகை பூஜா ஹெக்டேImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2025 18:38 PM

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. நடிகர் சூர்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். சிறுவயதில் சூர்யாவின் வளர்ப்புத் தாயான சுவாசிகவும் பூஜா ஹெக்டேவின் தாயும் உயிரிழந்த பிறகு காசியில் அவர்களின் உடலை எரிக்கும் இடத்தில் இவர்கள் குழந்தைகளாக சந்தித்து இருப்பார்கள். அப்போது பூஜா ஹெக்டேவின் அம்மாவிற்கு கொல்லி வைக்க முடியாத நிலையில் அவரது அப்பா சிங்கம் புலி குடி போதையில் இருப்பார். அப்போது அருகில் இருந்த சூர்யாவிடம் கொல்லி வைக்க கேட்பார்கள். அங்கு வந்த சூர்யா பூஜா ஹெக்டேவின் கையையும் பிடித்து இருவரும் இணைந்து கொல்லி வைப்பார்கள். இதனால் பூஜாவிற்கு சூர்யா மீது விருப்பம் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு பூஜா ஹெக்டே விலங்குகள் நல மருத்துவராக பணியாற்றும் மருத்துவமனைக்கு எதிர்பாராத விதமாக சூர்யா செல்வார். அங்கு சூர்யாவை கண்டுகொண்ட நடிகை பூஜா அவரிடம் தன்னை அறிமுகம் செய்துக்கொள்வார். பிறகு இவருவம் பேசி காதலிக்க தொடங்குவார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில் சூர்யாவின் வளர்ப்புத் தந்தையான ஜோஜூ ஜார்ஜ் உடன் ஏற்பட்ட தகறாரில் சூர்யா அவரது கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவார். இதனால் திருமணமும் நின்றுவிடும். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் காணக் கிடக்கின்றது.

ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே:

இந்த நிலையில் நடிகர் விஜயின் கடைசிப் படமான ஜன நாயகன் படத்தில் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

இந்தப் படத்தில் இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் இவர்கள் இருவரும் நடனம் ஆடிய ஹலமதி ஹபிபோ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தப் படத்திலும் இவர்களின் கூட்டணி வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜயின் கடைசிப் படத்தில் நடிப்பதை நெகிழ்ந்து பேசிய பூஜா ஹெக்டே:

இந்த நிலையில் நடிகர் விஜயின் கடைசிப் படத்தில் நடிப்பது குறித்து நடிகை பூகா ஹெக்டே நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மீண்டும் நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மிகவும் நல்ல மனிதர். எளிதாக அனைவரிடமும் பழகக்கூடியவர்.

இது அவருடைய கடைசிப் படம் என்பதில் எனக்கு நிச்சயமாக வருத்தம் உள்ளது. ஏன் என்றால் அவரது படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அவரது படங்கள் எங்களுக்கு கொண்டாட்டங்களாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலி: காரணம் என்ன?
சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலி: காரணம் என்ன?...
மாப்பிள்ளை பிடிக்கல.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
மாப்பிள்ளை பிடிக்கல.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு...
பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!...
கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!
கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!...
விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!
விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!...
போலி கஸ்டமர் கேர்: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி..!
போலி கஸ்டமர் கேர்: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி..!...
இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு- கார்த்தி!
இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு- கார்த்தி!...
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. நடந்தது என்ன?
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. நடந்தது என்ன?...
வாழ்நாள் சிறப்பு பயணம்- இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!
வாழ்நாள் சிறப்பு பயணம்- இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!...
மாதாந்திர ரயில் டிக்கெட் பெற செயலி கட்டாயம்..? பயணிகள் அவதி
மாதாந்திர ரயில் டிக்கெட் பெற செயலி கட்டாயம்..? பயணிகள் அவதி...
ஐபிஎல் பைனலில் மோதும் RCB vs PBKS! எந்த அணி இதுவரை ஆதிக்கம்?
ஐபிஎல் பைனலில் மோதும் RCB vs PBKS! எந்த அணி இதுவரை ஆதிக்கம்?...