PM Kisan : விரைவில் பிஎம் கிசான் 20வது தவணை.. வெளியான முக்கிய தகவல்!
PM Kisan 20th Installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் (PM Kisan Samman Nidhi Yojana Scheme) இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் 19 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், பிஎம் கிசான் 20வது தவணை (PM Kisan 20th Installment) எப்போது வரவு வைக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பிஎம் கிசான் 20வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 2025 ஜூன் மாத இறுதியில் பிஎம் கிசான் 20வது தவணைக்கான தொகை வரவு வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளதால், அது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் பிஎம் கிசான் திட்டம்
இந்தியாவில் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசால் (Central Government) செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூபாய் 6,000 வரவு வைக்கப்படுகிறது. அதாவது இந்த 6,000 ரூபாய் மொத்தமாக வரவு வைக்கப்படாமல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2,000 வரவு வைக்கப்படும். அதன்படி, பிஎம் கிசான் திடம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 19 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 20வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 19வது தவணை 2025, பிப்ரவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளதால், 20வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் ஆவளுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பிஎம் கிசான் 20வது தவணை 2025, ஜூலை மாத முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிஎம் கிசான் பெற விவசாயிகள் கட்டாயம் e KYC செய்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அவ்வாறு விவசாயிகள் தங்களது பிஎம் கிசான் கணக்கில் e KYC மேற்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு 20வது தவணை ரூ.2,000 பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.