Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெர்சனல் லோனுக்கான EMI கட்டத் தவறினால் ஏற்படும் 5 விளைவுகள் – எப்படி தவிர்ப்பது?

Personal Loan EMI Warning: இந்தியாவில் பெர்சனல் லோன் பெறுவது தற்போது எளிமையாக மாறியிருக்கிறது. குறிப்பாக சில நிதி நிறுவனங்களும், மொபைல் செயலிகளும் ரூ. 10, 000 முதல் ரூ.5,00,000 வரை கடன் வழங்குகிறது. இந்த நிலையில் மாதத் தவணையை கட்டத் தவறினால் ஏற்படும் 5 விளைவுகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பெர்சனல் லோனுக்கான EMI கட்டத் தவறினால் ஏற்படும் 5 விளைவுகள் – எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 14 Jun 2025 16:57 PM

இந்தியாவில் வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் நிதி நிறுவனங்கள், சில மொபைல் ஆப்களும் பெர்சனல் லோன் (Personal Loan) வழங்கி வருகின்றன. குறிப்பாக வங்கிகளை விட நிதி நிறுவனங்கள் மற்றும் மொபைல் செயலிகள் உடனுக்குடன் பெர்சனல் லோன் வழங்குகின்றன. இதில் வட்டி விகிதங்கள் அதிகம் என்றாலும் உடனடியாக கடன் கிடைப்பதால் பலரும் இந்த முறையில் பெர்சனல் லோன் பெற விரும்புகின்றனர். குறிப்பாக ரூ. 10,000 முதல் ரூ. 5,00,000 வரை பெரும்பாலான நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இத்தகைய கடன்களை பெற சில ஆதார், பான் கார்டு மற்றும் சம்பள விவரங்கள் அடங்கிய பே ஸ்லிப் ஆகியவற்றை வழங்கினாலே போதும். நமக்கு உடனடியாக கடன் கிடைக்கும். இதன் காரணமாக பெர்சன்ல் லோன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கு ஏற்ப மக்களின் அதனை முறையாக கையாளமால் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.  இதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), நுகர்வோர் பண கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. மின்ட் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்பைடையில் பெர்சனல் லோனுக்கான மாதத் தவணை (EMI) கட்டத் தவறினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

பெர்சனல் லோன் இஎம்ஐ கட்டத் தவறினால் ஏற்படும் 5 முக்கிய விளைவுகள்

  1. ஒரே ஒரு இஎம்ஐ கட்டத் தவறினால்கூட, உங்கள் சிபில் ஸ்கோர் 50 முதல் 70 பாயிண்ட் வரை குறையலாம். இது உங்கள் எதிர்காலக் கடன் விண்ணப்பங்களை பாதிக்கலாம். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறும்போது வட்டி விகிதம் உயர வாய்ப்பு உள்ளது. உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படுவது உங்கள் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும்.
  2. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், மாதத் தவணையை செலுத்த தவறினால் பொதுவாக 1 சதவிகிதம் – 2 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கின்றன. தவறிய மாதத் தவணையை மீண்டும் செலுத்தும்போது கூடுதலாக வட்டி (penal interest) சேர்க்கப்படும். இதனால் உங்கள் கடன் தொகை மேலும் அதிகரிக்கும்.
  3. 90 நாட்களுக்கும் மேல் மாதத் தவணை கட்டத் தவறினால் நான் பெர்ஃபார்மிங் அசெட் (Non-Performing Asset) ஆக அறிவிக்கப்படும். இந்த நிலை உருவானால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மோசமான ரெக்கார்டாகவே பதிவாகும்.
  4. மாதத் தவணை கட்டாமல் விட்டால் 60 நாட்களுக்குப் பிறகு, வங்கிகள் ரிக்கவரி அழைப்புகளை தொடங்கும். அப்போது கட்டாமல் இருந்தால் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
  5. ஒரு முறை தவறினால் கூட, உங்கள் எதிர்கால கடன்களுக்கான வாய்ப்பு குறையலாம். வங்கி, பைனான்ஸ் நிறுவனங்கள் உங்களுக்கு கடன் வழங்க தயங்கும். கிடைத்தாலும், உயர் வட்டி விகிதம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும்.

தவறுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

  • இஎம்ஐ செலுத்த மறந்து விட வாய்ப்பிருக்கிறது. எனவ ஆட்டோ டெபிட் மூலம் செலுத்துவதால் தவறுகளை தவிர்க்க முடியும்.
  • ஒரு மாதம் மாதத் தவணை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வங்கிகளிடம் பேசி நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்.
  • கடுமையான நேரங்களில் நிதி பத்திரம் மூலம் வங்கிகளுக்கு வாக்குறுதி அளிக்கலாம்.
  • சிபில் ஸ்கோர்களை அடிக்கடி பரிசோதித்து தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் தவறுகளை திருத்தலாம்.

ஒரு பெர்சனல் லோனுக்கான மாதத் தவணை செலுத்த தவறுவது சாதாரண விஷயமில்லை. இது உங்கள் நிதி நிலையை, எதிர்கால கடன்களையும் பாதிக்கக்கூடியது. ஆகவே, தவணைகளை தவறாமல் செலுத்துவதில் கட்டுப்பாடு வேண்டும். இது உங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிப்து மட்டுமல்லாமல், நிதி ஒழுங்கையும் உறுதி செய்யும்.

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....