ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக்.. ரூ.299 உள்ளிட்ட 4 ரீசார்ஜ் திட்டங்கள் திடீர் நீக்கம்!
இந்த மாற்றங்கள், இந்திய தொலைத்தொடர்பு துறையில் கட்டண உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நேரத்தில் வெளியாகியுள்ளன. சமீபத்திய Centrum Institutional Research அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் பிரீபெய்டு கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12, 2026: இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் தனது சில பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. ரூ.299, ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய 4 ரீசார்ஜ் திட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தற்போது அதிக விலை கொண்ட மாற்றுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட திட்டங்களுக்கு மாற்றாக வழங்கப்படும் சில திட்டங்களின் விலை சுமார் 5 முதல் 16 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இதில் ரூ.299 திட்டத்திற்கு பதிலாக வழங்கப்படும் புதிய திட்டத்தில் அதிகபட்சமாக சுமார் 16 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
ரூ.299 திட்டத்திற்கு பதிலாக ரூ.349 திட்டம்:
ஏர்டெல்லின் ரூ.299 பிரீபெய்டு திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக ரூ.349 திட்டம் உள்ளது.
ரூ.349 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் முன்பை விட ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சுமார் 16 சதவீத விலை அதிகரிப்பாகும்.மேலும், நடுத்தர விலை கொண்ட சில ரீசார்ஜ் திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளதால், பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் விலைத் தேர்வுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறைந்த விலை பிரிவில் ரூ.199 திட்டம் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்ததாக ரூ.219 திட்டம் உள்ளது. இதில் 28 நாட்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
விரைவில் டாரிஃப் உயருமா?
இந்த மாற்றங்கள், இந்திய தொலைத்தொடர்பு துறையில் கட்டண உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நேரத்தில் வெளியாகியுள்ளன. சமீபத்திய Centrum Institutional Research அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் பிரீபெய்டு கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய நடவடிக்கை எதிர்கால கட்டண உயர்வுக்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் அனைத்து பிரீபெய்டு திட்டங்களுக்குமான பொதுவான கட்டண உயர்வை இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது குறிப்பிட்ட சில திட்டங்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.
Also Read: இனி கடன் வழங்குவதை ஏஐ தான் தீர்மானிக்கும்.. ஆர்பிஐ கவர்னர் முக்கிய அறிவிப்பு!
எனவே, இதை முழுமையான டாரிஃப் உயர்வாகக் கருத முடியாது என்றும், இது பெரிய அளவிலான கட்டண மாற்றத்திற்கான சாத்தியமான முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியாவும் இதேபோன்ற மாற்றங்களை மேற்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்தே தொலைத்தொடர்பு துறையில் புதிய கட்டண உயர்வு ஏற்படுமா என்பது தெரியவரும்.