AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Turkey : பாகிஸ்தான் ஆதரவு சர்ச்சை.. துருக்கிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ள இந்தியா!

India Warning : ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளிப்பதால் இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி தயாரித்த ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க முயற்சித்தது. இந்தியாவின் எதிர்வினையாக, துருக்கி பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடலாம்.

Turkey : பாகிஸ்தான் ஆதரவு சர்ச்சை.. துருக்கிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ள இந்தியா!
இந்தியா- துருக்கி பிரச்னை
C Murugadoss
C Murugadoss | Published: 23 May 2025 09:19 AM IST

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்ட நிலைமையே காணப்பட்டது. இந்த மோதலின் போது, ​​பாகிஸ்தானின் எண்ணங்கள் தெளிவாக தெரிந்தது மட்டுமல்லாமல், துருக்கியின் உண்மையான முகமும் உலகிற்கு வெளிப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு துருக்கி பெரிதும் உதவியது. இப்போது இந்த உதவி துருக்கிக்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. துருக்கிக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதன் கீழ், இந்தியா துருக்கியுக்கு தெளிவான எச்சரிக்கையை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால், அது இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் என்று இந்திய அரசு துருக்கியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு தொடர் ஆதரவு கொடுப்பது சொந்த அழிவுக்கு வழிவகுக்கும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது இந்தியா. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை கூறுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது வளர்த்து வரும் பயங்கரவாத சுற்றுச்சூழல் அமைப்புக்கு எதிராக நம்பகமான எடுக்கவும் துருக்கி பாகிஸ்தானை வலுவாக வலியுறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி ட்ரோன் மூலம் இந்தியாவைத் தாக்க முயற்சி

ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு பாகிஸ்தான் பீதியில் இருந்தது. இதனால்தான் விரக்தியடைந்த பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க பல தோல்வியுற்ற முயற்சிகளை மேற்கொண்டது. இந்தக் காலகட்டத்தில், இந்திய இராணுவம் மற்றும் பொதுமக்கள் பகுதிகளைத் தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய 300-400 ட்ரோன்களில் பெரும்பாலானவை துருக்கியில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டவை. இந்த ட்ரோன்கள் லடாக்கின் லே முதல் குஜராத்தின் சர் க்ரீக் வரை இந்தியாவின் வான்வெளியை அத்துமீறிப் பறந்தன. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவுவதை இந்தியா உறுதி செய்தது

பாகிஸ்தானுக்கு தொடர் ஆதரவு

ஜம்மு காஷ்மீரில் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் படையெடுப்பு மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் துருக்கியே நீண்ட காலமாக ஆதரவளித்து வருகிறார். இது இந்தியா-துருக்கி உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும், பயங்கரவாதம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் சமநிலையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் இந்தியா துருக்கியை பலமுறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானை ஆதரிப்பதற்காக துருக்கிக்கு எதிரான இந்தியாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மேலும் துருக்கி அதன் சுமைகளைத் தாங்க வேண்டியுள்ளது. #BoycottTurkey என்ற தலைப்பு கடந்த பல நாட்களாக சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இது தவிர, துருக்கிய பொருட்கள், சேவைகள் மற்றும் சுற்றுலாவைப் புறக்கணிக்க இணையவாசிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக துருக்கி ரூ.32 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்க நேரிடலாம் என கணிக்கப்படுகிறது.

Follow Us