Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

G7 Summit : ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி.. ஜூன் மாத இறுதியில் கனடா செல்கிறார்!

PM Modi to Attend 2025 G7 Summit in Canada | 2024 ஆம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான உச்சி மாநாடு கனடாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

G7 Summit : ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி.. ஜூன் மாத இறுதியில் கனடா செல்கிறார்!
பிரதமர் நரேந்திர மோடி
vinalin-sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2025 08:49 AM

சென்னை, ஜூன் 07 : 2025 ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் (G7 Summit) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) பங்கேற்க உள்ளார். கனடாவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க அந்த நாட்டு அதிபர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில், இந்த 2025-ல் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜி7 உச்சி மாநாடு என்றால் என்ன?

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது தான் ஜி7 அமைப்பு. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜி 7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. வழக்கமாக ஜி7 உச்சி மாநாட்டுக்கு பிற நாட்டுத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் அழைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர்

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெற உள்ள நிலையில், அந்த நாட்டு பிரதமர் மார்க் கார்னி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று 2025, ஜூன் மாத இறுதியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி

2025 ஆம் ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கனடா அதிபர் மார்க் கார்னி இடம் இருந்து ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற அழைப்பு வந்துள்ளதாகவும், உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!...
கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. நடந்தது என்ன?
கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. நடந்தது என்ன?...
முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?
முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?...
தனுஷின் குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா!
தனுஷின் குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா!...
தங்க நகைக்கான விதிமுறைகள் தளர்வு: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு
தங்க நகைக்கான விதிமுறைகள் தளர்வு: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு...
“நீங்க தமிழ்நாட்டுல மட்டும் தான்” .. திமுகவுக்கு தமிழிசை பதிலடி!
“நீங்க தமிழ்நாட்டுல மட்டும் தான்” .. திமுகவுக்கு தமிழிசை பதிலடி!...
விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?
விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?...
கமல் - சிம்புவின் 'தக் லைஃப்' படத்தின் வசூல் இத்தனை கோடியா?
கமல் - சிம்புவின் 'தக் லைஃப்' படத்தின் வசூல் இத்தனை கோடியா?...
மறைந்த தாயின் ஆசை.. நிறைவேற்ற மகள் செய்த நெகிழ்ச்சி செயல்!
மறைந்த தாயின் ஆசை.. நிறைவேற்ற மகள் செய்த நெகிழ்ச்சி செயல்!...
ஆந்திராவில் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு
ஆந்திராவில் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு...
திருமணத்தை மீறிய உறவு.. மனைவி கொலை.. கணவனை சிக்க வைத்த சட்டை!
திருமணத்தை மீறிய உறவு.. மனைவி கொலை.. கணவனை சிக்க வைத்த சட்டை!...