AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு..

இந்த நிலநடுக்கத்தையடுத்து, சிலி தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் அவசர ஆய்வுகளை மேற்கொண்டனர். கடல்சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை உயிரிழப்பு அல்லது கடுமையான கட்டிட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 May 2026 07:25 AM IST

மே 26, 2026: தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யு.எஸ்.ஜி.எஸ். வெளியிட்ட தகவலின்படி,  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், உடனடி உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

அட்டகாமா பாலைவனப் பகுதியில் உள்ள கலாமா நகரத்திலிருந்து சுமார் 31 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூமியின் அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து, சிலி தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் அவசர ஆய்வுகளை மேற்கொண்டனர். கடல்சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை உயிரிழப்பு அல்லது கடுமையான கட்டிட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

நிலநடுக்கத்தால் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்:

ஆனால், அரிகா, தரபகா, ஆன்டோஃபகஸ்டா மற்றும் அட்டகாமா உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கடும் அதிர்வை உணர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில இடங்களில் மக்கள் வீடுகளிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் அவசரமாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், தொலைக்காட்சி சேனல்களில் வெளியான காட்சிகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்த பொருட்கள் அலமாரிகளில் இருந்து கீழே விழுந்து சிதறிக்கிடந்தன. நிலநடுக்க அதிர்வால் சில நொடிகள் மக்கள் பீதியடைந்தனர்.

சிலி நாட்டில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது ?

உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் சிலி முக்கிய இடம் வகிக்கிறது. நாஸ்கா, தென் அமெரிக்க மற்றும் அண்டார்டிக் எனும் மூன்று பெரும் புவித்தட்டு பகுதிகள் சிலி எல்லையில் சந்திப்பதால் அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க: வியட்நாமில் நிறவெறிக்கு உள்ளான இந்தியர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

சிலி மக்கள் பொதுவாக 7.0 ரிக்டர் அளவுக்கு குறைவான நிலநடுக்கங்களை பெரிதாக அச்சப்பட வேண்டியதாக கருதுவதில்லை. ஏனெனில், அந்த நாடு இதற்கு முன்பும் பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது.

1960ஆம் ஆண்டு தெற்கு சிலியின் வால்டிவியா நகரில் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலக வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது. அந்த பேரழிவில் சுமார் 9,500 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2010ஆம் ஆண்டு மத்திய சிலி கடற்கரை அருகே ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 520க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போதைய நிலநடுக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து ஏற்படக்கூடிய பிந்தைய அதிர்வுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow Us