
Success Story
தொழில் துவங்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் சிலரால் தான் துணிந்து களமிறங்கி தொழிலில் வெற்றிக்கொடி நாட்ட முடியும். அதற்கு சரியான திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை இருந்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும். இந்தியாவில் தொழிலில் சாதித்தவர்கள் பலரும் எந்த பின்புலமும் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களது வெற்றி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் தொழில் துவங்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் வாழ்க்கையில் பெரிய இடத்தில் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. எளிய குடும்பத்தில் வறுமையின் பிடியில் இருந்த எத்தனையோபேர் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். இந்த பக்கத்தில் தொழிலில் வெற்றி பெற்றவர்களின் கதையையும் அவர்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ளலாம்.
4 தலைமுறையாக தொடரும் வெற்றி… போத்தீஸ் உருவானது எப்படி தெரியுமா?
Pothys Success Story : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட போத்தீஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 4 தலைமுறைகளைக் கடந்தும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்போது நகைக் கடையும் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 13, 2025
- 16:15 pm
சரியான திட்டமிடல்… வித்தியாசமான வியாபர யுக்தி – ரூ.2000 கோடி நிறுவனமாக வளர்ந்த ஆச்சி
Taste of Triumph : சரியான திட்டமிடலும் வித்தியாசமான அனுகுமுறையும் இருந்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு பத்மசிங்கி வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணம். அவர் தான் இன்று மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஆச்சி மசாலாவின் நிறுவனர். அவரது வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 16:39 pm
லட்சக்கணக்கில் வருமானம்… வங்கி வேலையை விட்டு உணவுத் தொழிலில் சாதித்த தஞ்சாவூர் பெண்
From Banker to Entrepreneur : தொழில் துவங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதில் உள்ள ரிஸ்க் காரணமாக பலரும் தயங்குவர். அந்த வகையில் தஞ்சாவூரை சேர்ந்த கோகிலா, வங்கி வேலையை விட்டு தொழிலில் சாதித்திருக்கிறார். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:48 pm
17 முறை தோல்வி – தற்போது ரூ.40,000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஷேர்சாட் நிறுவனரின் வெற்றிக்கதை!
ShareChat Founder Success Story : ஒரு சில தோல்விகளையே சிலரால் சமாளிக்க முடியாது. ஆனால் ஒருவர் தொடர்ச்சியாக17வது முறையாக தோற்ற பிறகும், துவண்டு விடாமல் 18வது முறையாக முயற்சித்து தொழில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் தான் ஷேர் சாட் நிறுவனர் அங்குஷ் சச்தேவா.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:46 pm
மெரினாவில் டீ , சமோசா விற்றவர்… இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர் – யார் இந்த பாட்ரிசியா நாராயண்?
From Marina Beach to Awards : சிலரின் வெற்றிக்கதையைக் கேட்கும்போது நம்ப முடியாத ஆச்சரியங்கள் நிறைந்த சினிமா கதை போல இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் பாட்ரிசியா நாராயண். இளம் வயதில் திருமணம், குடும்ப வறுமை என அனைத்து சவால்களையும் சமாளித்து இன்று சென்னையில் 14 ஹோட்டல்களை நடத்தும் சாதனைக்கு சொந்தக்காரர்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:47 pm
மக்களின் பிரச்னையை பார்த்தவருக்கு கிடைத்த ஐடியா – ரூ.15 கோடி ஆண்டு வருமானம்… சிவம் தியாகி வென்றது எப்படி?
Supervisor to Multi-Crore Businessman: எந்த ஒரு வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் சிவம் தியாகி. ஒரு மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருந்த அவர் தனது முழுமையான ஈடுபட்டால், ஹெல்த் கேர் நிறுவனம் துவங்கி, தொழிலில் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:47 pm
12 வயதில் திருமணம்… தற்கொலை முயற்சி – துன்பங்களைக் கடந்து தொழிலில் சாதித்த கல்பனா சரோஜ்!
From Pain to Power : வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலரும் வறுமையான குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் வென்றவர்கள் தான். அப்படி ஒருவர் தான் கல்பனா சரோஜ் , மகாராஷ்டிராவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை என பார்க்காத துன்பங்களே இல்லை எனலாம். ஆனால் அவர் இன்று ரூ.11 கோடி நிறுவனத்தின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:50 pm
மாதம் ரூ.6,500 சம்பளம்… இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் உரிமையாளர் – ரிஸ்க் எடுத்தவருக்கு கிடைத்த வெற்றி!
Inspiring Entrepreneur Journey: இந்தியாவின் தொழிற்கனவு இல்லாத நபர்களே இல்லை எனலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் ரிஸ்க் காரணமாக, பலருக்கும் தயக்கம் ஏற்படும். அப்படி மாதம் ரூ.6,500 மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர் துணிந்து எடுத்த ரிஸ்க் காரணமாக இன்று ரூ.150 கோடி நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:50 pm
ஓவர் நைட்டில் கிடைத்த உலகப் புகழ்: தேசிய பிராண்டாக மாறிய சாலை ஓர டீக்கடை – டாலி சாய்வாலா வென்ற கதை
Tea Seller Turned Icon : கடந்த 2024 ஆம் ஆண்டு நாக்பூரில் சாலையோர டீக்கடையில் பில்கேட்ஸ் டீ குடிக்க, அந்த கடை ஓவர் நைட்டில் உலகப் புகழ்பெற்றது. அந்த கடைக்காரர் டாலி சாய்வாலா என சமூக வலைதளங்களில் டிரெண்டானார். இந்த நிலையில் அவர் இந்தியாவின் முன்னணி ஃபிரான்சைஸின் தலைவராக இருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்ககலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:51 pm
ரூ.500 முதலீட்டில் தொடங்கப்பட்ட தைரோகேர்… இன்று அதன் மதிப்பு பலகோடி – திரூப்பூர்காரர் வென்ற கதை!
From 500 to a Billion-Dollar Empire: இந்திய அளவில் இன்று தைரோகேர் பரிசோதனை நிலையம் இல்லாத நகரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு மக்களிடையே பிரபலமான நிறுவனம் ரூ.500 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? திருப்பூரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த வேலுமணி துவங்கிய இந்த நிறுவனம் இன்று பல கோடி மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:51 pm
தொழிற் கனவு… படிப்பை பாதியில் விட்ட இளைஞருக்கு அடித்த ஜாக்பாட் – ஓயோ நிறுவனரின் வெற்றிப் பயணம்
From Dropout to Billionaire : வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ரித்தேஷ் அகர்வால். ஓயோ நிறுவனத்தின் தலைவர். தொழில் ஆர்வம் காரணமாக, பெற்றோரின் எதிர்ப்பை மீறி கல்லூரி படிப்பை விட்டர், இன்று கோடிக்கணக்கான சொத்து மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:52 pm
இட்லி, தோசை மாவு விற்று ரூ. 600 கோடி நிறுவனமாக வளர்ந்த ஐடி ஃபிரெஷ் – வளர்ச்சிக்கான காரணம் தெரியுமா?
From Batter to Billion : மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, விற்பனையை துவங்கினால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு ஐடி ஃபிரெஷ் நிறுவனம் மிகப்பெரும் உதாரணம். பெங்களூரு மக்களின் பரபரப்பான வாழ்க்கைையை புரிந்து கொண்ட முஸ்தபா, எளிமையாக இட்லி, தோசை மாவு விற்கும் நிறுவனத்தை துவங்கினார். இன்று அது ரூ.600 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அவரது வெற்றிக் கதையை விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:52 pm
விவசாயிகளை கோடீஸ்வரராக்கிய அமுல்… பால் புரட்சிக்கு வித்திட்ட ஹீரோ – யார் இந்த வர்கீஸ் குரியன்?
Amul’s Inspiring Journey : பசுமை இந்தியாவின் பால் புரட்சிக்கு அடித்தளமிட்டவர் டாக்டர்.வர்கீஸ் குரியன். விவசாயிகளின் வாழ்வை மாற்றிய அமுல் நிறுவத்தின் பின்னணியில் இருந்து செயலாற்றியவர். விவசாயிகளை ஒருங்கிணைத்து அமுல் நிறுவனத்தை உருவாக்கி மாபெரும் புரட்சி செய்திருக்கிறார். அமுல் நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:53 pm
அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!
From Exam Anxiety to Business Empire: கல்லூரி கணிதத் தேர்வில் மூன்றாவது முறையாக தேர்வு எழுதும்போது ஏற்பட்ட பதட்டத்தால் பாதியிலேயே வெளியேறிய நபர் இன்று கோடிக்கணக்கான சொத்து மதிப்பு கொண்ட ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் தலைவர். அருண் ஐஸ்கிரீம் தொடங்கி ஆரோக்கியா பால் வரை ஒரு பண்ணாட்டு நிறுவனமாக வளர்ந்து எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Aug 12, 2025
- 15:53 pm