AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
குடியரசு தினம்

குடியரசு தினம்

குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு இந்த நாளில் அமல்படுத்தப்பட்டது, அதன் பிறகு நாடு முழுவதும் இந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்குகின்றன. 1950 ஆம் ஆண்டு இந்த நாளில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, இந்திய அரசுச் சட்டத்திற்குப் பதிலாக, இந்தியா ஒரு முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணை நவம்பர் 26, 1949 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பை முடிக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் ஆனது. ஜனவரி 26, 1930 அன்று, இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தது, எனவே, இந்த நாள் அரசியலமைப்பை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டது. குடியரசு தினத்தன்று, தேசத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது, மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

Read More

குடியரசு தின நிகழ்ச்சியில் 3வது வரிசையில் இருக்கை.. சால்வை அணிய மறுத்த ராகுல்.. பாஜகVSகாங்., அவமதிப்பு குற்றச்சாட்டு!!

BJP vs Congress clash; இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து, ராகுல் காந்தி செய்தது கலாச்சார அவமதிப்பு என குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதோடு, குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டும் அவர் அதனை அணியவில்லை என்றும் சாடி வருகின்றனர்.

ரஃபேல், மிக்-29, எஸ்யூ-30 விமானங்களுடன் விமானப்படையின் ‘சிந்தூர் அணிவகுப்பு’.. வீடியோ!!

இந்த அணிவகுப்பில், 16 போர் விமானங்கள், நான்கு போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஒன்பது ஹெலிகாப்டர்கள் உட்பட மொத்தம் 29 விமானப்படை விமானங்கள் பங்கேற்றன. இதில் ரஃபேல், எஸ்யூ-30 எம்கேஐ, மிக்-29 மற்றும் ஜாகுவார் விமானங்கள், அத்துடன் சி-130 மற்றும் சி-295 போன்ற மூலோபாய விமானங்கள் மற்றும் இந்திய கடற்படையின் பி-8ஐ விமானம் ஆகியவை பங்கேற்றன.

77வது குடியரசு தின அணிவகுப்பு: வந்தே மாதரம் தலைப்பில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள்..

டெல்லி கர்த்தவ்ய பாதையில் நடைபெற்ற 77வது குடியரசு தின அணிவகுப்பில், இந்தியாவின் ராணுவ வலிமையும் பண்பாட்டு செழுமையும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.. பிரம்மாண்டமாக நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சி..

Republic Day 2026: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோகா சக்கர விருதை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் படை வலிமையும் பன்முகக் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது.

77வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.. செல்போனில் நேரலை எப்படி பார்ப்பது? விவரம் இதோ..

Republic Day Parade: 77வது குடியரசு தின அணிவகுப்பு, கடந்த பல தசாப்தங்களாக இந்தியா அடைந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் உட்பட இந்தியாவின் ராணுவ வலிமை ஆகியவை பிரதானமாக இடம்பெறவுள்ளன. 

சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி! மிடுக்காக அணி வகுத்து வந்த முப்படையினர்!

Governor Ravi Hoists National Flag: சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் தேசியக் கொடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முப்படைகள் மற்றும் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் .

நாட்டின் 77வது குடியரசு தினம்.. கர்தவ்ய பாதையில் நடக்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு.. என்னென்ன சிறப்புகள்?

Republic Day: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 10,000 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் முறையாக, AI அடிப்படையிலான ஸ்மார்ட் கண்ணாடிகள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் முழுப் பகுதியையும் கண்காணித்து வருகின்றன.

குடியரசு தினம்:ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்…நிகழ்ச்சி நிரல் இதோ!

Chennai Republic Day: சென்னையில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளதை இந்தப் பதிவில் காணலாம்.

Padma Awards 2026: தமிழ்நாட்டில் 13 பத்ம விருதுகள்.. ஒட்டுமொத்தமாக 131 பேர்.. முழு விவரம் இதோ!

Padma Bhushan 2026 winnners: 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளின் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 131 பத்ம விருதுகளை வழங்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில், கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு பொது சேவைக்காகவும், பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு கலைக்காகவும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

குடியரசு தின அணிவகுப்பு – வந்தே மாதரம் 150 ஆண்டு விழா… வேற என்ன ஸ்பெஷல்?

Republic Day Parade : 77வது குடியரசு தின அணிவகுப்பு விழா இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகள் நிறைவை மையமாக கொண்டு, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புத் திறன், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பான கலவையாக அமைவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியரசு தினம் 2026 : சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – 7,500 போலீசார் குவிப்பு

Republic Day 2026 : இந்த 2026 ஆம் ஆண்டு குடியரசு தினம் நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் 7,500 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

குடியரசு தின விழாவில் வழங்கப்படும் பத்ம விருதுகள் – தமிழ்நாட்டில் இருந்து விருது பெறப்போவது யார்?

Padma Awards 2026 : குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறந்த கலைஞர்களுக்கு பத்ம விருது வழங்கப்படவிருக்கிறது. பத்ம விருதுகள் பெறுபவர்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்லது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குடியரசு தின பேரணியில் புதிய அம்சங்கள்: ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் அமைப்பு, பைரவ் படை, பாக்ட்ரியன் ஒட்டகங்கள்

ஆழமான தாக்குதல் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ ராக்கெட் ஏவுகணை அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் லைட் கமாண்டோ படைப்பிரிவு, மேலும் ஜான்ஸ்கர் குதிரைகள் மற்றும் பாக்ட்ரியன் ஒட்டகங்கள் ஆகியவை இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக இடம்பெறவுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) தெரிவித்தனர். முதன்முறையாக, 61வது குதிரைப் படை (61 Cavalry) உறுப்பினர்கள் போர்க்கள உடையுடன் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். அதேபோல், வீரர்களுடன் இணைந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ராணுவ உபகரணங்கள், “கட்டப் படி போர்க்கள அணிவகுப்பு (Phased Battle Array Formation)” வடிவில் கர்த்தவ்ய பாதை வழியாக நகரும்.

தமிழக காவல்துறைக்கு பெருமை..3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்-21 பேருக்கு தகைசால் விருது!

Republic Day Award: குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கமும், தமிழக அரசு சார்பில் 21 போலீசாருக்கு தகைசால் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் நாளை குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்…குடியரசு தின விழாவில் அறிவிப்பு? எவை அவை!

5 New Districts In Tamil Nadu: தமிழகத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்னென்ன மாவட்டங்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .