Rahul Gandhi
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் ராகுல் காந்தி. 1970ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பிறந்த ராகுல் காந்தி, ஹார்வர்ட் , கேம்பிரிஜ் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்று இருக்கிறார். தந்தை ராஜீவ் காந்தி மற்றும் அவரது பாட்டி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்து வைத்தார் ராகுல் காந்தி. 2004ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாக சென்றார். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு கட்சி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த 2017ஆம் ஆண்டே தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் களம் கண்ட காங்கிரஸ், தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் இருந்து எம்.பியானார். இத்தோல்வியை அடுத்து, கட்சி பதவியை துறந்தார். தோல்வியில் இருந்து கட்சியை மீட்டு கொண்ட வர, 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ மற்றும் நியாய யாத்திரை மேற்கொண்டார். அதன்பிறகு, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்ததை அடுத்து, தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்
நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..
இதுவரை திமுக தரப்பில் முழுமையான பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை சந்தித்து மாநிலங்களவை இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 26, 2026
- 08:04 am IST
முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..
DMK-Congress conflict: கனிமொழி, ராகுல் காந்தி சந்திப்பு மூலம் கூட்டணி குறித்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு, திமுக தரப்பில் பிப்ரவரி 3ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 28, 2026
- 12:39 pm IST
குடியரசு தின நிகழ்ச்சியில் 3வது வரிசையில் இருக்கை.. சால்வை அணிய மறுத்த ராகுல்.. பாஜகVSகாங்., அவமதிப்பு குற்றச்சாட்டு!!
BJP vs Congress clash; இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து, ராகுல் காந்தி செய்தது கலாச்சார அவமதிப்பு என குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதோடு, குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டும் அவர் அதனை அணியவில்லை என்றும் சாடி வருகின்றனர்.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 27, 2026
- 13:05 pm IST
கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்… ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை பேட்டி
Congress Alliance Talks: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த சலசலப்பு நிலவி வரும் நிலையில் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். தனையடுத்து கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
- Karthikeyan S
- Updated on: Jan 17, 2026
- 22:02 pm IST
யாருடன் கூட்டணி?.. ராகுல் காந்தியை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. இன்று இறுதி முடிவு?..
Congress alliance with DMK or TVK: அதுமட்டுமில்லாமல், விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸ் சிக்கலுக்கு அக்கட்சி நிர்வாகிகள் பலர் முக்கியத்துவம் கொடுத்து, ஆதரவு கொடுத்து வந்தனர். குறிப்பாக, ராகுல் காந்தியே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் கூட்டணி குறித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 17, 2026
- 06:49 am IST
ஜன நாயகன் படத்தை தாமதப்படுத்த முயற்சி.. விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மத்திய திரைப்பட சென்சார் வாரியம் மூலம் 'ஜன நாயகன்' திரைப்படத்தை தாமதப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்” என்று தெரிவித்தார்.
- Mukesh Kannan
- Updated on: Jan 13, 2026
- 23:14 pm IST
ஆட்சியாளர்களால் ஜனநாயகத்துக்கு ஆபத்து…. கூடலூரில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு
Rahul Gandhi Address to Students: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடினார். நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, ஜனநாயகத்துக்கு ஆட்சியாளர்களால் ஆபத்து என்று பேசினார்.
- Karthikeyan S
- Updated on: Jan 13, 2026
- 19:17 pm IST
விஜய் – பரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை?
Parveen Chakravarty - Vijay meet: காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சென்னையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Dec 6, 2025
- 11:55 am IST
தவெகவுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்? தொண்டர்களிடம் நடக்கும் ரகசிய சர்வே!
அந்தவகையில், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களில் பெரும்பாலானோர் மற்றுல் சில நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, சட்டமன்ற தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- esakkiraja selvarathinam
- Updated on: Nov 14, 2025
- 13:24 pm IST
Rahul Gandhi: ஹரியானா தேர்தலில் பிரேசில் மாடல் பெயர் எப்படி..? தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
Rahul Gandhi exposed Vote Scam: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் (Haryana Assembly Elections) மோசடி நடந்தது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் இடம்பெற்றது குறித்தும் குற்றம் சாட்டினார்.
- Mukesh Kannan
- Updated on: Nov 5, 2025
- 16:32 pm IST
கரூர் கூட்ட நெரிசல்.. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
CM MK Stalin Thanks Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இடன் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பான பதிவில், “இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 29, 2025
- 06:56 am IST
’வாக்கு திருட்டு நடந்தது 100% உண்மை.. ஆதாரம் இருக்கு’ மீண்டும் உறுதியாக சொன்ன ராகுல் காந்தி
Rahul Gandhi On Election Commission : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து மீண்டும் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, வாக்கு திருட்டு விவகாரத்தில் 100 சதவீதம் எங்களிடம் ஆதாரம் உள்ளதாக அவர் கூறினார். மேலும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அவர் விமர்சித்தார்.
- Umabarkavi K
- Updated on: Sep 18, 2025
- 13:24 pm IST
பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின்.. ஜீப் பேரணியில் பங்கேற்பு
Voter Adhikar Yatra : பீகார் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ராகுல் காந்தியுடன் ஜீப்பில் ஏறி, வாக்காளர் உரிமை யாத்திரையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். அவருடன் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார். அதோடு, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவும் இருந்தனர்.
- Umabarkavi K
- Updated on: Aug 27, 2025
- 13:06 pm IST
பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. ராகுல் காந்தியுடன் பேரணி.. என்ன மேட்டர்?
Rahul Gandhi Voter Adhikar Yatra : பீகாரில் எதிர்க்ட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று கலந்து கொள்கிறார். தர்பங்காவில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Aug 27, 2025
- 07:19 am IST
ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் முதல்வர் ஸ்டாலின்.. பீகாரில் ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்!
Rahul Gandhi Vote Chori Campaign : எதிர்க்ட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் நடந்து வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இவரோடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- Umabarkavi K
- Updated on: Aug 23, 2025
- 06:15 am IST