
Rahul Gandhi
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் ராகுல் காந்தி. 1970ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பிறந்த ராகுல் காந்தி, ஹார்வர்ட் , கேம்பிரிஜ் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்று இருக்கிறார். தந்தை ராஜீவ் காந்தி மற்றும் அவரது பாட்டி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்து வைத்தார் ராகுல் காந்தி. 2004ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாக சென்றார். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு கட்சி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த 2017ஆம் ஆண்டே தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் களம் கண்ட காங்கிரஸ், தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் இருந்து எம்.பியானார். இத்தோல்வியை அடுத்து, கட்சி பதவியை துறந்தார். தோல்வியில் இருந்து கட்சியை மீட்டு கொண்ட வர, 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ மற்றும் நியாய யாத்திரை மேற்கொண்டார். அதன்பிறகு, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்ததை அடுத்து, தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்
பீகாரில் நடந்த சம்பவம்.. ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு.. நடந்தது என்ன?
Rahul Gandhi In Bihar : பீகார் மாநிலத்தில் அனுமதியின்று நிகழ்ச்சி நடத்தியதாக கூறி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அவருடன் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையின் தடையை மீறி ராகுல் காந்தி அம்பேத்கர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார்.
- Umabarkavi K
- Updated on: May 16, 2025
- 08:59 am
India – Pakistan Tension: பஹல்காம் தாக்குதல் முதல் சண்டை நிறுத்தம் வரை.. பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்டு கார்கே, ராகுல் கடிதம்!
Special Parliament Session: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். எதிர்க்கட்சிகள் இதற்கான ஒருமித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள கூட்டு முயற்சி அவசியம் எனக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: May 15, 2025
- 12:00 pm
ஆபரேஷன் சிந்தூர்.. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை.. பிரபலங்கள் வரவேற்பு!
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- Petchi Avudaiappan
- Updated on: May 15, 2025
- 11:59 am
ராமரை புராண கதாப்பாத்திரம் என கூறிய ராகுல் காந்தி.. பாஜக கடும் கண்டனம்!
Rahul Gandhi Remark on Ramar Sparks Controversy | சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ராமர் குறித்து கூறிய கருத்துக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், ராகுல் காந்தியின் அந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
- Vinalin Sweety
- Updated on: May 15, 2025
- 12:01 pm
பெரும் சிக்கல்… சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்.. நீதிமன்றம் கிடுக்குபிடி!
National Herald Case : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஎன்எஸ் சட்டப்பிரிவு 223-ன் படி வழக்கு குறித்து அறிய சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தும்.
- Umabarkavi K
- Updated on: May 15, 2025
- 12:01 pm
“பலருக்கு தூக்கம் வராது” சசி தரூர் செய்த செயல்.. காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பாஜகவில் இணைவதாக பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், 2025 மே 2ஆம் தேதியான இன்று பிரதமர் மோடி விமான நிலையத்தில் வரவேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சி மேடையில் சசி தரூர் பெயரை குறிப்பிட்டு, காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: May 15, 2025
- 11:59 am
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க மறுப்பு.. டெல்லி கோர்ட் உத்தரவு!
National Herald Case : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்து, சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: May 15, 2025
- 11:59 am
தாக்குதலின் பிண்ணனியில் உள்ள நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும்.. காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி!
Rahul Gandhi Visits Pahalgam | ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்ரனர். இந்த நிலையில், அவர்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: May 15, 2025
- 12:00 pm
“இப்படியா பேசுவீங்க.. பொறுப்பற்றது” சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்தியை கடிந்த நீதிமன்றம்!
Supreme Court On Rahul Gandhi : சாவர்க்கர் வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துகளை பேசக்கூடாது என்றும் அப்படி பேசினால் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- Umabarkavi K
- Updated on: May 15, 2025
- 12:00 pm
Pahalgam Attack : பதற்றமான சூழலில் ஜம்மு & காஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Rahul Gandhi Visits Jammu and Kashmir | பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 25, 2025) ஜம்மு & காஷ்மீர் செல்கிறார்.
- Vinalin Sweety
- Updated on: May 15, 2025
- 12:00 pm
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கார்கே.. முழு ஒத்துழைப்பை தருவதாக உறுதி!
Rahul Gandhi Pledges Full Cooperation to Govt | இன்று (ஏப்ரல் 24, 2025) உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: May 15, 2025
- 11:59 am
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. நேஷனல் ஹெரால்ட் வழக்கு பின்னணி என்ன?
National Herald Case: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் பாஜகவின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: May 15, 2025
- 12:00 pm
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு : ராகுல்காந்தி – சோனியாகாந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
National Herald Money Laundering Case : நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் வெளிநாட்டுத் தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே மற்றும் பலரின் பெயர்களையும் அமலாக்கத் துறை சேர்த்துள்ளது.
- C Murugadoss
- Updated on: May 15, 2025
- 12:00 pm
ப.சிதம்பரத்துக்கு என்னாச்சு? தூக்கி கொண்டு ஓடிய காங்கிரஸ் தொண்டர்கள்!
P Chidambaram Health Update: குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிக வெப்பம் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, மயக்க மடைந்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
- Umabarkavi K
- Updated on: May 15, 2025
- 11:58 am