Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மக்களுக்கு எச்சரிக்கை: ஆர்ப்பரிக்கும் ஆறுகள்… ஒகேனக்கலில் குளிக்க தொடரும் தடை!

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீர் 56,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கனஅடி மற்றும் 12,500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரியில் குளிக்க தடை தொடரும் நிலையில், வெள்ள அபாயம் காரணமாக பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை: ஆர்ப்பரிக்கும் ஆறுகள்… ஒகேனக்கலில் குளிக்க தொடரும் தடை!
மேட்டூர் அணைImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 02 Jul 2025 09:14 AM

சேலம் ஜூலை 02: மேட்டூர் அணையில் (Mettur Dam) இருந்து வெளியேறும் நீரின் அளவு 2025 ஜூலை 2 ஆம் தேதி இன்று காலை 8 மணியளவில் 56,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா (Delta)  பாசனத்திற்காக 22,500 கனஅடி மற்றும் 12,500 கனஅடி உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு (Water flow increases in Hogenakkal Cauvery) காரணமாக, பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் உள்ளது. வெள்ள அபாயம் நிலவி வருவதால், ஆற்றோர மக்களுக்கு அரசு தணிக்கை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மேட்டூர் அணியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திறக்கப்படவுள்ளதால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ஜூலை 1 முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறக்க என நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக இன்று காலை 8 மணிக்கு குறைக்கப்படுகிறது. இதில், டெல்டா பாசனத்திற்கு 22,500 கனஅடி மற்றும் 16 கண் மதகு வழியாக 12,500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒகேனக்கலில் குளிக்க தடை தொடரும்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. தொடரும் பாதுகாப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் குளிக்க தடையிடும் நடவடிக்கையை ஏற்க்கியுள்ளது. அருவிகள் மற்றும் பரிசல் இயக்கமும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர் திறப்பு நிலவரம்

மேட்டூரிலிருந்து வெளியேறும் நீர்; எச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை

மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 56 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுகிறது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ தவிர்க்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறையில், இந்த நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்குள் திறக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாசனத்திற்கு நீர் திறப்பு உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 2025 ஜூலை 1 முதல் 137 நாட்களுக்கு பாசனத்திற்காக நீர் திறக்கப்படும். இந்நிலையில், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பாசன வசதி பெறும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு முக்கிய நீர்த்தேக்கம் ஆகும். இது 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் முதல் பெரிய அணையாக விளங்குகிறது. சுமார் 1,700 மீட்டர் நீளமுடைய இந்த அணையின் முழு கொள்ளளவு 93.47 டி.எம்.சி ஆகும்.

மேட்டூர் அணையின் நீர் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு பாசன வசதியாக பயன்படுத்தப்படுகிறது. அணையின் கீழ் அமைந்துள்ள ஹைட்ரோ மின்சார நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.