Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கட்டப்பட்ட கை, கால்கள்.. நிதி நிறுவன அதிபருக்கு நடந்த கொடூரம்.. 3 நாட்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி!

Dindigul Murder : திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி நிறுவன அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிதி நிறுவன அதிபரை கொன்று அட்டைப் பெட்டியில் உடலை கட்டிப்போட்டு வைத்து வீசியது தெரியவந்ததுள்ளது. இந்த கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டப்பட்ட கை, கால்கள்.. நிதி நிறுவன அதிபருக்கு நடந்த கொடூரம்.. 3 நாட்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 22 Jun 2025 14:19 PM

திண்டுக்கல், ஜூன் 22 : திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி நிறுவன அதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுதத் கடனை திருப்பி கேட்டதால், நிதி நிறுவன அதிபரை கொன்று அட்டைப் பெட்டியில் உடலை வைத்து வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஜூன் 18ஆம் தேதி  திண்டுக்கல் மாவட்டம் பழனை நெடுஞ்சாலையில் ராமையன்பட்டி தரைப்பாலத்தின் அருகே கை, கால்களுடன் கட்டப்பட்டு அட்டைப் பெட்டியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நிதி நிறுவன அதிபர் கொலை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, கொல்லப்பட்ட நபர் 58 வயதான குரேபந்திரன் என்று தெரியவந்தது. அதோடு, அவர் நிதி நிறுவன ஒன்றையும் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் அவரை கொன்றது யார்? காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க துணை காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்யன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்ர் பாலசுப்பிரமணி, அங்கமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை விசாரணை நடத்தியது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இந்த கொலையில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்து, கண்ணன் (54), பிரியா (26), சாந்தி (59) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

அட்டைப் பெட்டியில் கிடந்த சடலம்

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதாவது, குபேந்திரனுடன், இவர்கள் மூன்று பேருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இந்த பிரச்னையில் சம்பவத்தன்று மூன்று பேரும் குபேந்திரனை தள்ளி விட்டதாகவும், அதில் குபேந்திரன் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, குபேந்திரனின் உலை சம்பவத்தன்று ராமையன்பட்டி தரைப்பாலம் அருகே அட்டைப் பெட்டியில் வைத்து வீசி விட்டு சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசார் முன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு, கொலைக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அண்மைக் காலங்களில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் குடும்பத் தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.