தாய் கண்முன்னே மகளை கவ்விச்சென்ற சிறுத்தை.. 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சோகம்..
Leopard Attack: வால்பாறையில் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் மனோஜ் என்பவரில் 6 வயது மகளை ஜூன் 20, 2025 மாலை சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜூன் 21, 2025 பிற்பகல் 6 வயது சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாய் கண் முன்னே சிறுத்தை புலி தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பச்சைமலை எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரது 6 வயது மகள் ரோஷினி தாயுடன் இருந்தபோது சிறுத்தை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விசாரிக்கையில் சிறுத்தை தனது மகளை கவ்வி சென்றதாக கூறியுள்ளார். உடனே ஜூன் 20,2025 மாலை முதல் தேடுதல் பணி தொடங்கப்பட்டு ஜூன் 21, 2025 பிற்பகல் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலைத் தோட்டம் அதிகம் இருக்கும் வால்பாறையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா பீகார் ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். வால்பாறை பகுதியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயின் கண்முன்னே சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை:
அந்த வகையில் 20 ஜூன் 2025 தேவையான நேற்று மாலை சுமார் ஆறு மணி அளவில் பச்சைமலை எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளியான மனோஜின் மனைவி வீட்டுப் பெண் புறத்தில் தண்ணீர் பிடிக்க சென்று உள்ளார். அப்போது உடன் ஆறு வயது மகள் ரோஷினியும் உடன் இருந்தார். தண்ணீர் பிடித்து விட்டு குடத்தை வீட்டிற்குள் வைப்பதற்காக அவர் வந்துள்ளார். திரும்பி சென்ற பொழுது வெளியே பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
தன்னுடைய கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு என்னவென்று விசாரிக்கையில் சிறுத்தை புலி தனது மகளை வனப்பகுதிக்கொள் கவ்வி சென்றதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 20,2025 – நேற்று மாலை முதல் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
சிறுமியின் சடலம் மீட்பு:
ஜூன் 20,205 மாலை முதல் ட்ரோன் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வனத்துறையினரும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை இரண்டு மணி வரை சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள மரக்கிளைகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், மழை பெய்ததால் தேடும் பணி பாதிக்கப்பட்டது. இதை அடுத்து இன்று காலை மழை பெய்த போதும் தேடுதல் பணி அதிகாரிகள் தொடர்ந்தனர். இந்த சூழலில் சிறுமியின் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.