AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநர்.. ஸ்ரீதேவியின் சாதனைப் பயணமும்.. குவியும் மக்கள் ஆதரவும்..

இவர்களிருவரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயிற்சியை முடித்துவிட்டு ஒன்றாகப் பணிக்கு வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் திருநங்கைகள் அமைப்பின் தலைவி அசீனா ஆகியோரின் தொடர் ஆதரவும், வழிகாட்டுதலும் தான் தங்களை இந்த நிலைக்கு உயர்த்தியதாக ஸ்ரீதேவி நன்றியோடு நினைவு கூர்கிறார்.

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநர்.. ஸ்ரீதேவியின் சாதனைப் பயணமும்.. குவியும் மக்கள் ஆதரவும்..
Transgender Driver
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Jun 2026 08:10 AM IST

புதுக்கோட்டை, ஜுன் 20: சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே யாசகம் கேட்பவர்கள் மற்றும் புறக்கணிக்கப்படுபவர்கள் என்ற பொதுப் பார்வையும், கடுமையான தடைகளும் நிலவி வருகின்றன. இந்தச் சமூகக் கட்டமைப்பு மற்றும் பொதுப் பார்வையைத் தனது விடாமுயற்சியால் உடைத்தெறிந்து சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீதேவி. தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பொறுப்பேற்று, கம்பீரமாகப் பேருந்தை இயக்கி வரும் இவருக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!

சிறுவயதுக் கனவும் தற்காலிகப் பணியும்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கல்லுக்குமேல்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதேவிக்கு, சிறு வயது முதலே பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. இதற்காகத் தீவிர ஓட்டுநர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.

கடந்த சில காலங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இவருக்குத் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வரை, அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலைகளில் அனுபவம் வாய்ந்த ஆண் ஓட்டுநர்களுக்கு இணையாகத் துணிச்சலுடன் பேருந்தை இயக்கி அசத்தி வருகிறார்.

ஓட்டுநருடன் இணைந்த நடத்துநர் கலைதேவி:

ஸ்ரீதேவி இயக்கும் இதே அரசுப் பேருந்தில், புதுக்கோட்டை பாலநகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு திருநங்கையான கலைதேவி என்பவர் நடத்துநராக இணைந்து பணிபுரிந்து வருகிறார். இவர்களிருவரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயிற்சியை முடித்துவிட்டு ஒன்றாகப் பணிக்கு வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் திருநங்கைகள் அமைப்பின் தலைவி அசீனா ஆகியோரின் தொடர் ஆதரவும், வழிகாட்டுதலும் தான் தங்களை இந்த நிலைக்கு உயர்த்தியதாக ஸ்ரீதேவி நன்றியோடு நினைவு கூர்கிறார்.

பாதுகாப்பான பயணம்: பயணிகளின் சான்றுகள்:

முதன்முதலாக அரசுப் பேருந்து ஒன்றில் திருநங்கைகளே ஓட்டுநராகவும், நடத்துநராகவும் இருப்பதை ஆரம்பத்தில் ஆச்சரியத்துடன் பார்த்த பயணிகள், தற்போது இவர்களுடன் பயணிப்பதை மிகவும் பாதுகாப்பாகவும் பெருமையாகவும் கருதுகின்றனர். ஸ்ரீதேவி மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பாகவும் பேருந்தை இயக்குவதால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தைரியமாகப் பயணிக்கலாம் என்று சக பயணிகள் தங்களது அனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளனர்.

அரசுக்கு வைக்கப்பட்ட உருக்கமான கோரிக்கை:

தற்போது வரை தினக்கூலி அல்லது தற்காலிகப் பணியாளராகப் பேருந்து இயக்கி வரும் ஸ்ரீதேவி, தனக்குக் கிடைத்துள்ள மக்கள் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களை போன்ற திருநங்கைகளின் திறமையையும், உழைப்பையும் முழுமையாக அங்கீகரிக்கும் வகையில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிகப் பணியை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரந்தரப் பணியாக மாற்றித் தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு சவால்களையும் கடந்து திருநங்கைகள் அரசுப் பணி மற்றும் இதரத் துறைகளில் தடம் பதிப்பது, அவர்கள் மீதான சமூக மரியாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

Follow Us