AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வளிமண்டல சுழற்சியால் வெளுத்து வாங்கப்போகும் மழை: 7 நாட்களுக்கு எங்கெல்லாம் அலர்ட்?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 11, 12 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி போன்ற மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

வளிமண்டல சுழற்சியால் வெளுத்து வாங்கப்போகும் மழை: 7 நாட்களுக்கு எங்கெல்லாம் அலர்ட்?
கோப்பு புகைப்படம் Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 11 Jun 2026 14:37 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் எவ்வித மழையுமின்றி வறண்ட வானிலையே காணப்பட்டது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்யூர் பகுதியில் 93.5 மில்லிமீட்டர் (9 சென்டிமீட்டர்) மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாலுமுக்கு மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக தொண்டியில் 39.5 டிகிரி செல்சியஸும், சமவெளிப் பகுதியில் குறைந்தபட்சமாக கோவை விமான நிலையத்தில் 22.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

வளிமண்டல சுழற்சியும் மாவட்டங்களுக்கான மழை எச்சரிக்கையும்

ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர வான்பரப்பில், 1.5 கிலோமீட்டர் மற்றும் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் இரண்டு அடுக்கு வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, ஜூன் 11 மற்றும் ஜூன் 12 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் கோவை, திருநெல்வேலியின் மலைப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், ஜூன் 15 முதல் 17 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதி முன்னறிவிப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் நகரின் உஷ்ணம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ரீல்ஸ் எடுத்து போஸ்ட் போடவா சிங்கப்பெண் பிரிவு?”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை

ஜூன் 11 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். கடல் பகுதி கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட இந்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.

Follow Us