Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 4 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update : வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஜூலை 26,27ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 4 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 26 Jul 2025 06:10 AM

சென்னை, ஜூலை 26 :  தமிழக்ததில்  நான்கு மாவட்டங்களில் 2025 ஜூலை 26ஆம் தேதியான இன்று கனமழை (Tamil Nadu Weather Alert) பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மட்டும் கன முதல் மிக கனமழை (Chennai Weather)  பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக்ததில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருகிறது. 2025 ஜூலை மாத தொடக்கத்தில் வெயில் வாட்டிய நிலையில், அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையொட்டி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை,   சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலை மற்றும்  இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி,  வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 2025 ஜூலை 25ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தற்போத மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வங்காள வங்கதேச கரையை கடந்து, மேற்கு வங்களா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் வங்கதேச கடேலோரப் பகுதிகளில் நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி?

4 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை


அதோடு, மகாராஷ்டிரா கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பல் அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஜூலை 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025 ஜூலை 26ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டஙகளில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூலை 27ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: ஊட்டியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் மூடல்!

அதன்பிறகு, 2025 ஜூலை 31ஆம் தேதி வரை தமிழக்ததில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 26ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.