குறையும் மீன் விலை.. முடிந்தது மீன்பிடி தடைக்காலம்.. 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
Tamil Nadu Fishing Ban Period : மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் 2025 ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது- இதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீன்வர்கள் கடலுக்கு சென்றுள்ளன்ர். இதனை அடுத்து, மீன்களின் விலை குறையக் கூடும்.

சென்னை, ஜூன் 15 : தமிழக கடலோர மாவட்டங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் (Tamil Nadu Fishing Ban Period) முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, 2025 ஜூன் 15ஆம் தேதியான இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். கிட்டதட்ட 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். இதனால், மீன்களின் வரத்து அதிகரித்து, மீன்விலை குறையக் கூடும். இந்திய கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரையும், அரபிக்கடலில் இரண்டரை மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடைக்காலம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபாடும். தமிழகத்தை பொறுத்தவரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.
முடிந்தது மீன்பிடி தடைக்காலம்
இந்த கட்டுப்பாடு மீன் இனப்பெருக்க சுழற்சியை பாதுகாக்கவும், கடல் உயிரினங்களின் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் 2025 ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கியது.
அன்றைய நாள் முதல் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த 61 நாட்களும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.




இதனால், மீன்படி துறைமுகங்கள், மீன்படி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. இதனால், மீன்களில் விலையும் 61 நாட்களாக உயர்ந்தே காணப்பட்டது. மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த மீன்படி தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய மீன்படி தடைக்காலம், 2025 ஜூன 14ஆம் தேதியான நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.
61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்லும் மீனவர்கள்
இதனை அடுத்து, நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளையும் மீனவர்கள் செய்திருந்தனர். விசைப்படகுகளுடன் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று ஒரு வாரத்திற்கு பிறகு கரை திரும்புவார்கள்.
இதனால், அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து இருந்தனர். குறிப்பாக, மீன் வலைகளையும், படகுகளையும் சீரமைத்தனர். அதோடு, ஒரு வாரத்திற்கு பதப்படுத்தி வைக்க ஐஸ்கட்டிகளையும் தயாராக வைத்துக் கொண்டு நள்ளிரவே கடலுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றுள்ளனர்.
இதனால், தமிழகத்தில் மீன்களின் வரத்து குறைத்து, மீன் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரு வாரத்திற்கு முன்வு கூட, கடுமையான வரத்து குறைவால், வஞ்சிரம் மீன் கிலோ ரூ.15000 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், சங்கரா ரூ.900, இறால் ரூ.500, சீலா ரூ.800 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனி வரும் நாட்களில் மீன்களில் விலை குறையக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.