Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை’ போலீஸ் அதிகாரிகளை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

Sivaganga Custody Death : போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்த சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

‘யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை’ போலீஸ் அதிகாரிகளை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Jun 2025 19:30 PM

சென்னை, ஜூன் 30 :  கடமை தவறினால்  நடவடிக்கை மிக கடுமையாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர்  உயிரிழந்தது (Sivaganga Custody Death) மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2025 ஜூன் 30ஆம் தேதியான இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை”

அதன்படி, “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

போதைப் பொருள் – கள்ளச்சாராயம் – பெண்கள் பாதுகாப்பு – லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் – ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என  தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

 

சிவகங்கை இளைஞர் மரணம்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்கு 27 வயதான அஜித் குமார் என்பவரை போலீசார் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இளைஞர் அஜித் குமார் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்கள் போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இளைஞரின் மரணம் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என உறவினர்கள், குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான தனிப்படை காவல்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உயிரிழந்த இளைஞர் அஜித் குமார் உடலில் 18 காயங்கள் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், அஜித் குமரின் உட்புற, வெளிப்புற உடல்களில் காயங்கள் இருப்பது முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.