அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகும் படங்கள் – வேலை நிறுத்தம் வாபஸ்! – என்ன நடந்தது?
வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் தமிழ் திரைப்படத் துறையினரின் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 28 : 8 நாளுக்கு பிறகே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற திரையங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைந்து செப்டம்பர் 1, 2026 முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது. அதன் படி வருகிற செப்டம்பர் 1, 2026 முதல் திரைப்படங்கள் வெளியாகது எனவும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திரைத்துறை வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகனுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், பேரவை முடிந்ததும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதுப்படங்களின் ரிலீஸ் மற்றும் படப்பிடிப்பு ரத்து தொடர்பான அறிவிப்புகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.