AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“மக்களே உஷார்!”.. தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்.. சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!!

Swine Flu Cases Surge in Tamil Nadu: தமிழகத்தில் H1N1 பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஜனவரியில் 19-ஆக இருந்த நிலையில் தற்போது 339-ஆக அதிர்ச்சிகரமாக உயர்ந்துள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மக்களே உஷார்!”.. தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்.. சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!!
பன்றிக்காய்ச்சல்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Aug 2026 12:27 PM IST

சென்னை, ஆகஸ்ட் 26: தமிழகத்தில் H1N1 வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை அவசர வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பலமடங்கு உயர்ந்த காய்ச்சல் பாதிப்பு:

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே இத்தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் 19 பேருக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆகப் பலமடங்கு உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பன்றிக் காய்ச்சலின் முதன்மை அறிகுறிகள்:

பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையின்படி, சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடல் சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும்:

எனவே, லேசான சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலும் பொதுமக்கள் அதைச் சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், மருந்தகங்களில் நேரடியாகச் சென்று சுய மருத்துவம் (Self-medication) செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சையைப் பெறுவதன் மூலமே தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனப் பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!

தயார் நிலையில் சுகாதாரத்துறை:

இத்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப் போட்டுத் தூய்மையாகக் கழுவுவது மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தகுந்த சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற சர்க்கரை-நுரையீரல் நோய் பாதிப்புடையவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனிடையே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான ‘டாமிஃப்ளூ’ மாத்திரைகள், பரிசோதனைக் கருவிகள் மற்றும் காய்ச்சல் வார்டுகளில் போதிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை உறுதியளித்துள்ளது.

Follow Us