மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணம்.. டோக்கன் எப்படி வாங்கலாம்?
Free Bus Token: சென்னையில் இருக்கும் மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் இன்று ஜூன் 21, 2025 முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் தங்களது இருப்பு சான்றிதழாக ரேஷன் அட்டை, வயது சான்றிதழாக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் இருக்கும் முத்து குடி மக்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் டோக்கன்கள் இன்று முதல் அதாவது ஜூன் 21 2025 முதல் வினியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த டோக்கன் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்காக தொடர்ந்து அரசு தரப்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்:
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “ சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்துக்கான கட்டணம் இல்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜூன் 21 2025 ஆம் தேதி வழங்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான டோக்கன்கள் இன்று முதல் அதாவது ஜூன் 21 205 முதல் ஜூலை 31 2025 வரை தினமும் காலை எட்டு மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் வழங்கும் பணி:
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், வரும் 21.06.2025 முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும்.
– மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்.#MTCChennai | #MTC4Chennai |… pic.twitter.com/56SWtIONgc— MTC Chennai (@MtcChennai) June 20, 2025
இந்த டோக்கன்கள் அடையாறு, திருவான்மியூர், தி. நகர், சைதாப்பேட்டை பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், குரோம்பேட்டை, ஆலந்தூர், ஐயப்பன் தாங்கல், கே கே நகர், அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், அயனாவரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், பாடியநல்லூர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பெரம்பூர் பேருந்து நிலையம், செம்மஞ்சேரி, கிளாம்பாக்கம், பெசன்ட் நகர், மந்தைவெளி, சைதாப்பேட்டை மத்திய பணிமனை, பிராட்வே, பல்லாவரம், கிண்டி எஸ்டேட், வடபழனி, ஆதம்பாக்கம், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, ஐ சி எப் சுங்கச்சாவடி, வியாசர்பாடி, மாதவரம், செங்குன்றம், பூந்தமல்லி, வள்ளலார் நகர், திருவொற்றியூர், குன்றத்தூர் பேருந்து நிலையங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டோக்கன்களை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் தங்களது இருப்பு சான்றிதழாக ரேஷன் அட்டை, வயது சான்றிதழாக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு இரண்டு கலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது