AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் – திராவிடர் கழகம் நாளை ஆர்ப்பாட்டம்..

Dravidar Kazhagam Protest: நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் – திராவிடர் கழகம் நாளை ஆர்ப்பாட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 May 2026 20:36 PM IST

மே 15, 2026: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் மே 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஆர்.எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பலரும் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளதால், தேர்வை ரத்து செய்யக்கூடாது என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், ஜூன் மாதத்தில் மீண்டும் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகளிருக்கு ரூ. 2500 உதவித்தொகை.. கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்:

இந்த நிலையில், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ கல்விக்கான தகுதி தேர்வு என்ற பெயரில் ‘நீட்’ தேர்வை ஒன்றிய அரசு திணித்தது. அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் பல நூறு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு… – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் கண்டனம்

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதை ஒன்றிய அரசே ஏற்றுக்கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. எனவே, மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திராவிடர் கழகம் நாளை மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

இதனை திமுக வரவேற்கிறது. மேலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், அந்தந்த பகுதிகளில் திராவிடர் கழகம் நடத்தும் இந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us