AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகளிருக்கு ரூ. 2500 உதவித்தொகை.. கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட உதவித்தொகையை வழங்குவதற்காக, 60 வயது வரையிலான மகளிரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையில், 60 வயது வரையிலான மகளிருக்கு மாதம் 2,500 ரூபாயும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் 3,000 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மகளிருக்கு ரூ. 2500 உதவித்தொகை.. கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 May 2026 15:55 PM IST

மே 15, 2026: மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக்கழகம் தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் தற்போது மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் உதவித்தொகையை உயர்த்தி 2,500 ரூபாயாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த சூழலில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மே 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெற்றது.

மக்கள் பயன்பெறும் திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்:

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், இதற்கு முன்பு இருந்த அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மே 14ஆம் தேதி மாணவர்களுக்கு வழங்கப்படும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் 1,000 ரூபாய் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: தமிழக முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு… பரபரப்பை கிளப்பி இன்பதுரை எம்.பி.!

அப்போது தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த மாத மகளிர் உரிமைத்தொகை சற்று தாமதமாக வழங்கப்படும் என்றும், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அவகாசம் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மே 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகையான 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மகளிருக்கு ரூ. 2500 உதவித்தொகை:

இந்த சூழலில், தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: ‘தொழில் புரட்சியை நோக்கித் தமிழகம்’.. தலைமைச் செயலகத்தில் முன்னணி சிஇஓ-க்களைச் சந்தித்த முதல்வர் விஜய்!

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட உதவித்தொகையை வழங்குவதற்காக, 60 வயது வரையிலான மகளிரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையில், 60 வயது வரையிலான மகளிருக்கு மாதம் 2,500 ரூபாயும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் 3,000 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இன்னும் சில மாதங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்து, மகளிருக்கான உதவித்தொகை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us