“வாட் ப்ரோ, இட்ஸ் வெறி ராங் ப்ரோ!” ஈரோட்டில் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

Poster against tvk Vijay in Erode: "ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?" இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ (what bro it's very wrong bro) போன்ற பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.

வாட் ப்ரோ, இட்ஸ் வெறி ராங் ப்ரோ! ஈரோட்டில் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

விஜய்க்கு எதிரான போஸ்டர்

Updated On: 

18 Dec 2025 10:20 AM

 IST

ஈரோடு, டிசம்பர் 18: தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் இன்று அவருக்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுப்பி, நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விஜய்யின் இந்த பொதுக்கூட்டத்திற்கான நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 6 மணிக்கெல்லாம் அப்பகுதி மக்கள் அலைகடலென திரண்டு குவிந்து வருகின்றனர். அங்கு காலை உணவு போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் விஜய்யின் வருகைக்காக காத்திருந்து வருகின்றனர். இதனிடையே, சென்னையில் தனது இல்லத்தில் இருந்து காலை 8 மணிக்கு விஜய் புறப்பட்டுள்ளார். தொடர்ந்து, விமானம் மூலம் கோவை செல்லும் அவர், அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு செல்கிறார்.

இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

பொதுக்கூட்டத்திற்கு பலத்த கட்டுப்பாடு:

இதனிடையே, இந்த கூட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலும், முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழிகளிலும் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்:

ஆனால், காலையிலேயே பலர் கைக்குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்தனர். அதேபோல், பல கர்ப்பிணி பெண்களும் அங்கு வந்தனர். இதையடுத்து, தவெக நிர்வாகிகளே அவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்காமல் திரும்பி அனுப்பி வைத்தனர். அதேபோல், அங்கு காலை உணவு, ஸ்நாக்ஸ் போன்ற எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குள் விஜய்யின் வருகைக்காக காத்திருந்து வருகின்றனர். இதனிடையே, கரூர் துயர சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்:

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் நலம் விசாரிக்காததற்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?” இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ (what bro it’s very wrong bro) போன்ற பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், விஜய் Present, absent என்றும் குறிப்பிட்டு, விஜய் கரூர் மக்களை சந்திப்பதில் இருந்து Absent என்றும், ஜனநாயகன் ஆடியோ லாஞ்சிற்காக மலேசியா செல்வது குறித்தும் அதிதல் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Related Stories
மதுரையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் – தீக்குளித்த இளைஞர் மரணம்
கஞ்சா புகைத்த மாணவர்களை போட்டுக்கொடுத்த சிறுவர்கள் மீது கடும் தாக்குதல் – வீடியோ வைரலான நிலையில் போலீஸ் வழக்குப்பதிவு
ரூ.1000 மதிப்பிலான பட்டுப்புடவை வெறும் ரூ.299 மட்டுமே…. பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம்… நூதன மோசடி
Year Ender 2025 : ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ்… ஏஐ மூலம் சுங்க கட்டணம் வசூல் – இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்கள்
கோவை தெற்கு தொகுதிக்கு குறி வைக்கும் செந்தில் பாலாஜி…என்ன காரணம்!
நாளை அனுமன் ஜெயந்தி…நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடை மாலை அணிவித்து வழிபாடு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?