மாந்திரீக உதவிக்காக பேஸ்புக் பதிவு.. போலீசாருக்கு கிடைத்த எலும்புக்கூடு.. நெல்லை கயல்விழி கொலையில் நடந்தது என்ன?

Nellai Kayalvizhi's Murder: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கயல்விழி 2024 அக்டோபரில் மாயமானார். மாந்திரீக உதவிக்காக பேஸ்புக்கில் பதிவு செய்ததன் மூலம் மோசடி செய்யப்பட்டு, பின்னர் நகைக்காக நால்வரால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாந்திரீக உதவிக்காக பேஸ்புக் பதிவு.. போலீசாருக்கு கிடைத்த எலும்புக்கூடு.. நெல்லை கயல்விழி கொலையில் நடந்தது என்ன?

நெல்லை கயல்விழி மர்மமனமான மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Updated On: 

18 Jun 2025 08:14 AM

நெல்லை ஜூன் 18: நெல்லை (Tirunelveli) மாவட்டத்தைச் சேர்ந்த கயல்விழி (Kayalvizhi Murder) கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் மாயமானார். விசாரணையில், சிவசாமி என்ற சாமியார் மற்றும் மூவர் சேர்ந்து, 7 பவுன் நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. கயல்விழி, கணவருடன் சேர விரும்பி மாந்திரீக உதவிக்காக பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். அதனை பயன்படுத்தி மாயாண்டி ராஜா நெருங்கி ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். பின்னர் பணத்தை திரும்ப கேள்வி எழுப்பியதால், நான்கு பேர் (4 Person Arrested) சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணத் தோல்வி, மோசடி, கொலை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்த கயல்விழி (28), கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தவர். கடந்த 2023 அக்டோபர் 5ஆம் தேதி கோவிலுக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு மாயமானார். பல மாதங்களாக விசாரணை நடத்திய பழவூர் போலீசார், கண்காணிப்பு காட்சிகள் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சேர்ந்த சாமியார் சிவசாமி அவரை காரில் அழைத்துச் சென்றதை 2025 ஜூன் 16 ஆம் தேதி கண்டறிந்தனர்.

கயல்விழியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நால்வர்

அதன்படி கைது செய்யப்பட்ட சிவசாமி விசாரணையில், 7 பவுன் நகைக்காக தனது கூட்டாளிகளான மாயாண்டி ராஜா, கண்ணன், சிவனேஸ்வரியுடன் சேர்ந்து கயல்விழியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை மணிமுத்தாறு 80 அடி அகல கால்வாயில் வீசியது தெரியவந்தது. பின்னர் அந்த இடத்திலிருந்து கயல்விழியின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் வேலை பார்த்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட கயல்விழி, 2024 பிப்ரவரியில் அவரை பிரிந்துவிட்டார். பின்னர் மீண்டும் கணவருடன் சேர விரும்பி பல கோவில்களுக்கு சென்று வேண்டிக்கொண்டார். பேஸ்புக்கில் மாந்திரீக உதவி கேட்ட நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த மாயாண்டி ராஜா அவரது வாழ்க்கையில் நுழைந்து மோசடி செய்தார்.

கயல்விழி மர்மமான மரணம்: நடந்தது என்ன?

நெல்லை கயல்விழி மர்மமான மரணம் குறித்து அதிர்ச்சி தகவல்

மாந்திரீக வலையால் மோசடியில் சிக்கிய கயல்விழியிடம், மாயாண்டி ராஜா மற்றும் சிவசாமி ரூ.5 லட்சம் வரை பறித்தனர். பணம் திருப்பி தரக் கோரிய கயல்விழியை, சுசீந்திரத்துக்கு அழைத்து வந்து நால்வரும் சேர்ந்து கொலை செய்தனர்.

பின்னர் அவரது உடலை திருநெல்வேலியில் உள்ள கால்வாயில் வீசி விட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கயல்விழியின் எலும்புக்கூடுகள் மற்றும் உடை, காலணிகள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன. இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்குபின் அண்மையில் கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிவனேஸ்வரி கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்றவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.