AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் வழக்கு.. முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!

Madras High Court Warns: தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்ய வியாழக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பு.

தேர்தல் வழக்கு.. முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!
முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Aug 2026 13:13 PM IST

சென்னை, ஆகஸ்ட் 25: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் தேர்வை எதிர்த்துத் தொடரப்படும் தேர்தல் வழக்குகள் நீதித் துறையில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இத்தகைய தேர்தல் வழக்குகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பது சட்டவிதியாகும். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் சட்டமன்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யத் தொடர்ந்து கால அவகாசம் கோரி வந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது

இதையும் படிக்க: “பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்”.. ‘ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை’ vs ‘லாட்டரி மருமகன்’ வார்த்தை மோதலால் பரபரப்பு!

தேர்தல் வழக்கின் பின்னணி:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதியில் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இதேபோல், திருச்சி கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, இவை அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தன.

உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கை:

இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, எதிர்தரப்பில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தங்களது தரப்பில் மனுத் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே கடந்த விசாரணையின் போதும் இரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவகாசம் கோருவதை நீதிபதி ஏற்க மறுத்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மீண்டும் அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : “கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!

வியாழக்கிழமை கெடு மற்றும் அபராத எச்சரிக்கை:

மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்த நீதிபதி லட்சுமி நாராயணன், அன்றைய தினத்திற்குள் வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்யத் தவறினால் ₹50,000 அபராதம் விதிக்க நேரிடும் என்று முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிற்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார். தற்போது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சருடன் கலந்து பேசி மனுத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் கெடுவைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று மனுத் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us