AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாக்கில் கரையும் கோகுலாஷ்டமி இனிப்பு அப்பம்: 10 நிமிடத்தில் செய்யும் ரகசியம்!

Gokulashtami Sweet Appam: ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து கெட்டியான தோசை மாவு பதத்தில் அரைத்து ஏலக்காய், தேங்காய் துருவல் கலக்க வேண்டும். தயாரித்த மாவை குழியப்ப சட்டியில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும். இந்த எளிய முறையில் செய்யப்படும் மென்மையான இனிப்பு அப்பம் கோகுலாஷ்டமி நைவேத்தியத்திற்கு மிகவும் ஏற்றதாகும்.

நாக்கில் கரையும் கோகுலாஷ்டமி இனிப்பு அப்பம்: 10 நிமிடத்தில் செய்யும் ரகசியம்!
நைவேத்தியப் பலகாரங்கள் Image Source: getty
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 25 Aug 2026 12:54 PM IST

கோகுலாஷ்டமி நைவேத்தியத்திற்கு மிகவும் உகந்த பாரம்பரிய பலகாரங்களில் இனிப்பு அப்பம் முதன்மையான ஒன்றாகும். பச்சரிசியை இரண்டு மணி நேரம் நன்றாக ஊறவைத்து, நீரை வடித்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஊறிய அரிசியுடன் துருவிய வெல்லம் மற்றும் கனிந்த வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் கெட்டியான தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும். இனிப்பு அப்பம் பஞ்சு போல் மென்மையாக வர வாழைப்பழத்தின் ஈரப்பதமும் மாவின் பதமும் மிக முக்கியமாகும். குழியப்ப சட்டியில் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் மாவை ஊற்ற வேண்டும். இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் நாவில் கரையும் சுவையான நைவேத்திய இனிப்பு அப்பம் தயாராகிவிடும்.

கிருஷ்ண ஜெயந்தி நைவேத்தியங்களின் சிறப்பு

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினமான கோகுலாஷ்டமி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்பட உள்ளது. குழந்தை வடிவாய் இல்லங்களுக்கு வரும் கண்ணனை மகிழ்விக்க வீடுகளில் வண்ணக் கோலமிட்டு, அவனுக்குப் பிடித்தமான வெண்ணெய் மற்றும் இனிப்பு, காரப் பலகாரங்களைப் படைப்பது காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும்.

அவசியமான அவல் மற்றும் பால் பொருட்கள்

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த உணவாகக் கருதப்படும் அவல், வெண்ணெய், தயிர் மற்றும் காய்ச்சி ஆறவைத்த பால் ஆகியவை வழிபாட்டின் முதன்மை நைவேத்தியங்களாக வைக்கப்படுகின்றன. குசேலரின் அன்பை அவல் மூலம் ஏற்றுக்கொண்ட தத்துவத்தை நினைவுகூரும் வகையில், வெல்லம் கலந்த இனிப்பு அவல் அல்லது கெட்டித் தயிர் கலந்த தாளித்த அவல் படைக்கப்படுகிறது.

Also Read: ஓடோடி வருவான் ஆயர்பாடி கண்ணன்: நெஞ்சை அள்ளும் கோகுலாஷ்டமி!

பாரம்பரிய இனிப்பு மற்றும் காரப் பலகாரங்கள்

வழிபாட்டின் முதன்மைப் பலகாரங்களாக அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு கொண்டு செய்யப்படும் சீடை (இனிப்புச் சீடை மற்றும் உப்புக் சீடை), மொறுமொறுப்பான முறுக்கு, தட்டை, மற்றும் தட்டையான அதிரசம் ஆகியவை தயாரித்து நைவேத்தியம் செய்யப்படுகின்றன. மேலும், நெய் கலந்த இனிப்பு அப்பம் மற்றும் ரவா லட்டு ஆகியவை இறைவனுக்குப் படைக்கப்படும் சிறப்பான பலகாரப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

கோகுலாஷ்டமி நைவேத்தியத்திற்காக பஞ்சு போன்ற மென்மையான, சுவையான இனிப்பு அப்பம் தயாரிக்கும் எளிய செய்முறை இதோ:

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

வெல்லம் – 3/4 கப் (துருவியது)

வாழைப்பழத்தில் பாதி – 1 (நன்கு கணிந்தது)

ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் அல்லது எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை விளக்கப் படிகள்

அரிசியை ஊறவைத்தல்: பச்சரிசியை நன்கு கழுவி, குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின் நீரை முழுமையாக வடித்துக்கொள்ளவும்.

மாவை அரைத்தல்: மிக்ஸியில் ஊறவைத்த அரிசியுடன் துருவிய வெல்லம் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து, அதிக தண்ணீர் சேர்க்காமல் தோசை மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக அரைக்கவும்.

சுவை கூட்டுதல்: அரைத்த மாவில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் பொன்னிறமாக வறுத்த தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

அப்பம் சுடுதல்: குழியப்ப சட்டியில் அல்லது கடாயில் நெய்/எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும். ஒரு சிறிய கரண்டியால் மாவை எடுத்து ஊற்றினால், அது நன்றாக உப்பி மேலே வரும்.

வேகவைத்தல்: இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால், நாவில் கரையும் சுவையான கோகுலாஷ்டமி இனிப்பு அப்பம் தயார்.

Follow Us