AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு.. இன்று காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

Kolathur Constituency Election Case: கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது! தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு.. இன்று காலை 10:30 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!
மு.க.ஸ்டாலின், வி.எஸ்.பாபு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Sep 2026 06:44 AM IST

சென்னை, செப்.03: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கை மற்றும் இயந்திரங்களின் சரிபார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், உயர் நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்குத் தனது முக்கியத் தீர்ப்பை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகளும் மு.க.ஸ்டாலின் மனுவும்:

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் ஆணையம் தனது கடமையையும் பணியையும் சரியாகச் செய்யவில்லை என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களை ஒப்பிட்டுச் சரிபார்க்கும் பணியின் போது, 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரெனக் கோளாறாகி நின்றதாகவும், சுமார் 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு தெளிவான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:

வாக்கு எண்ணிக்கை மற்றும் விவிபேட் சரிபார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதால், கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், முறையான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

வழக்கில் இன்று காலை தீர்ப்பு:

இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது. இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த பரபரப்பான வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளதாக நீதிமன்றக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Follow Us