AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடகு – துபாரே யானைகள் முகாமில் சோகம்.. யானை விழுந்து 33 வயது சென்னை பெண் கணவர் கண்முன்னே பலி..

யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் பதற்றமடைந்து அங்கிருந்து விலக முயன்றனர். அந்த சமயத்தில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஜினு என்ற பெண், யானைகள் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு யானை திடீரென அவர் மீது சரிந்தது. இதனால் ஜினு யானையின் அடியில் சிக்கிக் கொண்டார்.

குடகு – துபாரே யானைகள் முகாமில் சோகம்.. யானை விழுந்து 33 வயது சென்னை பெண் கணவர் கண்முன்னே பலி..
குடகு முகாமில் சண்டைப்போட்டுக்கொண்ட யானைகள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 May 2026 17:02 PM IST

மே 18, 2026: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் அருகே உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்த சூழலில், சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக துபாரே யானைகள் முகாம் விளங்கி வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்த முகாம், யானைகள் பயிற்சி, பராமரிப்பு மற்றும் குளியல் நிகழ்வுகளுக்காக மிகவும் பிரபலமானது.

குறிப்பாக வனத்துறையினரால் பராமரிக்கப்படும் இந்த முகாமில், சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு கொடுப்பது, குளிப்பாட்டுவது மற்றும் அருகில் இருந்து அவற்றை பார்ப்பது போன்ற அனுபவங்களை பெறுகின்றனர். கோடை விடுமுறை காலங்களில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கமாகும்.

மேலும் படிக்க: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?

திடீரென சண்டையிடத்தொடங்கிய யானைகள்:

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பமும் துபாரே முகாமிற்கு சுற்றுலா சென்றிருந்தது. அப்போது யானைகள் குளிப்பதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு யானைகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிடத் தொடங்கின.

யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் பதற்றமடைந்து அங்கிருந்து விலக முயன்றனர். அந்த சமயத்தில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஜினு என்ற பெண், யானைகள் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: கிளாண்டர்ஸ் நோய்த்தொற்று.. தமிழகம் முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு..

பெண்ணின் மீது விழுந்த யானை:

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு யானை திடீரென அவர் மீது சரிந்தது. இதனால் ஜினு யானையின் அடியில் சிக்கிக் கொண்டார். குழந்தையை கையில் வைத்திருந்த அவரது கணவர் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், உடனே எழுந்து தனது மனைவியை காப்பாற்ற போராடினார்.

ஆனால், யானையின் அடியில் சிக்கியிருந்த ஜினுவை காப்பாற்ற முடியவில்லை. யானையின் எடையால் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் கணவன் கண்முன்னே உயிரிழந்த இந்த சம்பவம் துபாரே முகாமில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us