இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் சுமார் 1,400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படம் 'வாரணாசி'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள மிக முக்கியமான நீருக்கடியிலான ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்குவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்திற்காக ஹைதராபாத் பிலிம் சிட்டி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செயற்கைக் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.