பித்தளை வியாபாரியின் மகள், தனது காதலன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே ஆயுத கொள்ளையை திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தின் நாக்பானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது. பித்தளை வியாபாரியான முகமது இம்ரானின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், குடும்பத்தினரை மிரட்டி ரூ.1.2 கோடி பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.