Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலி: காரணம் என்ன?

Infant Dies on Flight to Chennai: மொரிஷியசில் பிறந்த 8 நாட்கள் குழந்தை, இருதய பிரச்சினையால் சென்னைக்கு சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், விமானப் பயணத்தின் போதே குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் மருத்துவ வசதிகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலி: காரணம் என்ன?
சென்னைக்கு விமானத்தில் பயணித்த 8 நாள் குழந்தை பலிImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 03 Jun 2025 10:50 AM

சென்னை ஜூன் 03: மொரிஷியசில் பிறந்த 8 நாள் குழந்தைக்கு இருதயப் பிரச்சனை இருந்ததால், சிகிச்சைக்காக சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது. குழந்தையின் பெற்றோர் மோனிஷ் குமார் மற்றும் பூஜா ஆகியோர் உடன் பயணித்தனர். விமானம் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை திடீரென உயிரிழந்தது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மருத்துவமனைக்கு வருவதற்குள் குழந்தை இறந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொரீஷியசில் பிறந்து சுமார் 8 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை

மொரீஷியசில் பிறந்து சுமார் 8 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை, இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவசர சிகிச்சைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டது. குழந்தையின் பெற்றோர் மோனிஷ் குமார் (37) மற்றும் பூஜா (32) ஆகியோர், சிகிச்சைக்காக தங்கள் புதிதாக பிறந்த ஆண் குழந்தையை விமானம் மூலம் மொரிஷியசிலிருந்து சென்னைக்கு கொண்டு வர முயன்றனர்.

விமானத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை

இந்நிலையில், விமானம் பறந்து கொண்டு இருந்த நேரத்தில் அந்த குழந்தை திடீரென உயிரிழந்தது. விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், குழந்தை இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியையும் பேர்சோகத்தையும் ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், குழந்தை விமானத்தில் உயிரிழந்தது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் சுகாதார மற்றும் விமானப் பயண பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

குழந்தையை மீட்க முடியாமல் போன துயரம்

இந்த பேராபத்து, குழந்தையை மீட்க முடியாமல் போன துயரத்தை மட்டுமல்லாமல், வெளிநாட்டு நோயாளிகள் இந்திய மருத்துவமனைகளை நம்பி வருவதில் ஏற்படும் சிக்கல்களையும் வெளிப்படுத்துகிறது. குழந்தையின் உடல், விசாரணைகள் முடிந்ததும், மீண்டும் மொரிஷியசுக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் மருத்துவ பாதுகாப்பு எப்படி இருக்கும்?

விமானத்தில் மருத்துவ பாதுகாப்பு என்பது பயணிகள் மற்றும் விமான சிருஷ்டிகளில் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையாகும்.

மருத்துவக் கருவிகள்

விமானங்களில் அவசர நிலைக்கு தேவையான முதல் உதவி பெட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மற்றும் AED (Automated External Defibrillator) போன்ற கருவிகள் இருக்கும்.

மருத்துவ பணியாளர்கள்

பல விமானங்களில் மருத்துவத்துறையினர் பயணமாக இருந்தால், அவசர மருத்துவ உதவி கேட்கப்படலாம்.

மருத்துவ அவசர சேவை

பயணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், விமான அலைவரிசை மூலம் தரமான மருத்துவ ஆலோசனை பெறப்படலாம்.

பயணிகளுக்கான அறிவுரைகள்

பயண முன் உடல்நலம் சோதனை, குறிப்பாக சுவாச பிரச்சினைகள், இதய நோய்கள் உள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு விதிகள்

காற்றழுத்தம், ஹைட்ரேஷன் போன்றவை குறைவாக இருப்பதால், மருத்துவ முறைகள் அதன்படி ஏற்பாடு செய்யப்படும்.

Bengaluru Stampede: சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?
Bengaluru Stampede: சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?...
இந்தி சினிமாவிற்கு நோ சொன்ன காரணம் பற்றி நடிகை சிம்ரன் ஓபன் டாக்!
இந்தி சினிமாவிற்கு நோ சொன்ன காரணம் பற்றி நடிகை சிம்ரன் ஓபன் டாக்!...
'சிம்புதான் தக் லைஃப் படத்துக்கு பொருத்தமானவர்' - மணிரத்னம்!
'சிம்புதான் தக் லைஃப் படத்துக்கு பொருத்தமானவர்' - மணிரத்னம்!...
கோட் படத்தில் 'சிஎஸ்கே' காட்சி வைக்கக் காரணம் - வெங்கட் பிரபு!
கோட் படத்தில் 'சிஎஸ்கே' காட்சி வைக்கக் காரணம் - வெங்கட் பிரபு!...
ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா?
ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா?...
துணியில் சாயம் ஒட்டிவிட்டதா? இப்படி செய்து நீக்கலாம்: எளிய டிப்ஸ்
துணியில் சாயம் ஒட்டிவிட்டதா? இப்படி செய்து நீக்கலாம்: எளிய டிப்ஸ்...
அதிக உடற்பயிற்சியும் ஆபத்து.. இந்த விஷயத்தில் கவனமா இருங்க!
அதிக உடற்பயிற்சியும் ஆபத்து.. இந்த விஷயத்தில் கவனமா இருங்க!...
'தக் லைஃப்' பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
'தக் லைஃப்' பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
'ஜன நாயகன்' பட தமிழக ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
'ஜன நாயகன்' பட தமிழக ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
தவெக கொடிக்கும் பிஎஸ்பி கொடிக்கும் தொடர்பு இல்லை: என்.ஆனந்த்
தவெக கொடிக்கும் பிஎஸ்பி கொடிக்கும் தொடர்பு இல்லை: என்.ஆனந்த்...
சட்டென மாறிய வானிலை: சென்னையில் பரவலாக மழை..!
சட்டென மாறிய வானிலை: சென்னையில் பரவலாக மழை..!...