AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம்!

Heavy Rain Alert: தெற்கு குஜராத் முதல் கர்நாடகா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பாதை மற்றும் புதிய வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் ஜூலை 3-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… மீனவர்கள் கடலுக்குப் போக வேண்டாம்!
மாதிரி புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 01 Jul 2026 15:35 PM IST

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 01, 2026) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் சில இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 78 மில்லிமீட்டர் (8 சென்டிமீட்டர்) மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து வால்பாறையில் 4 சென்டிமீட்டரும், சின்கோனா, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை மற்றும் திருவள்ளூரின் அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது.

வளிமண்டல மாறுபாடுகளும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும்

தற்போது நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக, தெற்கு குஜராத் முதல் கர்நாடகா வரை நீடிக்கும் ஒரு கடல்மட்ட காற்றழுத்த தாழ்வுப் பாதை அமைந்துள்ளது. மேலும், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசப் பகுதிகளுக்கு மேல் 1.5 கிலோமீட்டர் முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் உந்துதலால், வரும் ஜூலை 03-ஆம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அடுத்த சில தினங்களுக்கான மழை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

இந்த வளிமண்டல மாற்றங்களால் ஜூலை 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, ஜூலை 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வெப்பநிலை நிலவரம் மற்றும் சென்னைக்கான கணிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. இருப்பினும், மதுரை விமான நிலையப் பகுதியில் அதிகபட்சமாக 39.0° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதியில் குறைந்தபட்சமாக கோயம்புத்தூரில் 21.6° செல்சியஸும், மலைப்பகுதியான ஊட்டியின் நிலவரப்படி 12.4° செல்சியஸும் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Also Read: தனியார் பஸ் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா போடி – தாம்பரம் சிறப்பு ரயில்?

மீனவர்களுக்கான கடற்பகுதி எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள்

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். குறிப்பாக மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான் கடல் மற்றும் கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால், ஜூலை 05-ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தென் மண்டல தலைவருக்காக விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.

Follow Us