AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை – எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடிய சி.விஜயபாஸ்கர்..

சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சாதகமாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, இந்த தனி அணியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை – எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடிய சி.விஜயபாஸ்கர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Jun 2026 17:12 PM IST

ஜூன் 15, 2026: உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாக பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல என முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த சூழலில், அதிமுக இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வந்தது. அதாவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில், எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் கொண்ட தனி அணி உருவானது.

 

Follow Us