AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவில் தேங்காய் அழுகினால் பயமா? இதோ அதன் நிஜமான ஆன்மீக ரகசியம்!

Rotten Temple Coconuts: கோவிலில் அர்ச்சனை செய்த தேங்காய் அழுகி இருந்தால் அது அபசகுனம் அல்ல, மாறாக நம் குடும்பத்தாரை பிடித்துள்ள கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அந்த தேங்காய் தனக்குள்ளே ஈர்த்து நம்மை காப்பாற்றியுள்ளது என்பதே அதன் அர்த்தம் ஆகும். சாஸ்திரங்களின்படி, இந்த நிகழ்வு வீட்டில் உள்ள பணக்கஷ்டம் மற்றும் தீராத துன்பங்கள் அனைத்தும் அழுகிய தேங்காயோடு ஒழிந்து, விரைவில் ஒரு புதிய சுப விடியல் பிறக்கப் போவதைக் குறிக்கும் நல்ல அறிகுறியாகும்.

கோவில் தேங்காய் அழுகினால் பயமா? இதோ அதன் நிஜமான ஆன்மீக ரகசியம்!
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jun 2026 18:05 PM IST

பொதுவாக, அர்ச்சனை தேங்காய் அழுகி இருந்தால் அது ஏதோ பெரிய அபசகுனம் என்று நாம் நினைப்பது தவறு. ஆன்மீகப் பெரியோர்களின் கூற்றுப்படி, நம்முடைய குடும்பத்தையோ அல்லது நம்மையோ பிடித்துள்ள எதிர்மறை ஆற்றல்கள் (Negative energies), கண் திருஷ்டி, மற்றும் தீய சக்திகள் அனைத்தையும் அந்த தேங்காய் தனக்குள்ளே ஈர்த்துக்கொண்டதன் அடையாளமே அது அழுகிப்போவதற்குக் காரணம். அதாவது, உங்களுக்கு வரவிருந்த ஒரு பெரிய ஆபத்தை அல்லது தோஷத்தை அந்தத் தேங்காய் தன் வசம் இழுத்துக் கொண்டு, உங்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றியுள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். எனவே, இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

அழுகிய தேங்காய் உணர்த்தும் ஆன்மீக அறிகுறி

சாஸ்திரங்களின்படி, தேங்காய் அழுகுவது என்பது ஒருவரது வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், மனக்கவலைகள் மற்றும் தீராத நோய்கள் போன்ற துன்பங்கள் அனைத்தும் விரைவில் நீங்கப் போகிறது என்பதைக் குறிக்கும் ஒரு சுப அறிகுறியாகும். உங்களைச் சுற்றியிருந்த கெட்ட விஷயங்கள் அழுகிய தேங்காயோடு மறைந்து, உங்கள் வாழ்வில் ஒரு புதிய விடியலும், நேர்மறையான மாற்றங்களும் ஏற்படப் போவதை இது உணர்த்துகிறது. இறைவன் உங்கள் பிராத்தனையை ஏற்றுக்கொண்டு, உங்கள் சுமையைத் தான் வாங்கிக்கொண்டார் என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

கோவில் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால், அதை நினைத்து நாள் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு அழுகிய தேங்காயை உடனடியாக வீட்டின் உள்ளே வைக்காமல், வீட்டை விட்டு வெளியே எறிந்து விட வேண்டும். பின்னர், கைகள் மற்றும் கால்களைத் தூய்மையாகக் கழுவிக்கொண்டு, பூஜை அறையில் உள்ள இறைவனிடம், “எங்கள் தோஷங்கள் நீங்கியதற்கு நன்றி” என்று மனதார வேண்டி, கற்பூர ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

அழுகிய தேங்காய்க்குப் பின்னுள்ள அறிவியல் உண்மை

ஆன்மீகக் காரணங்கள் ஒருபுறமிருக்க, இதற்குப் பின்னால் ஒரு எளிய அறிவியல் உண்மையும் ஒளிந்துள்ளது. தேங்காயின் குடுமியில் உள்ள சிறிய துவாரங்கள் வழியாகக் காற்று அல்லது ஈரப்பதம் உள்ளே புகுந்துவிட்டால், உள்ளே இருக்கும் நீர் மற்றும் பருப்பு இயற்கையாகவே அழுகிவிடும். இதற்கும் மனிதர்களின் நற்பேறுக்கோ அல்லது துரதிர்ஷ்டத்திற்கோ எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, தேவையில்லாத பயங்களையும், மனக் குழப்பங்களையும் தவிர்த்து, இறைவனின் மீது முழு நம்பிக்கை வைப்பதே மனதிற்கு நிம்மதியைத் தரும்.

Follow Us